காலையில் என்ன பருகலாம்
காலையில் எழுந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் இரண்டு டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.
தண்ணீருக்கு பதிலாக முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை நீருடன் குடிக்கலாம்.
அருகம்புல் சாறு அல்சர் நோயாளிக்கு ஏற்ற பானம். அருகம்புல்லை நாமே வீட்டில் அரைத்து சாறு எடுத்து வெந்நீருடன் பருகுவது நல்லது.
வெள்ளை பூசணி சாறு குடித்தால் தொப்பை ஊளைச்சதை குறையும்.
சிறிது மிளகுத்தூள், மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால் முழு பலன் பெறலாம்,
இஞ்சி சாறுடன் தேன் கலந்து குடித்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரையும்.
நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.
நெல்லி சாறு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை அதிகரிக்காது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சரும பாதுகாப்புக்கும், சிறுநீரக தொற்று நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.
இளநீர் இயற்கை தந்த வரப்பிரசாதம். வெறும் வயிற்றில் குடிக்க கூடாது. உடலுக்கு குளிர்ச்சி தரும்.
உடலுக்கு தேவையான அனைத்து மினரல்களும் இதில் உள்ளது.
பழைய சாதத்தில் சிறிது சீரகத்தை இட்டு வெந்நீரை ஊற்றி வைக்க வேண்டும். காலையில் இந்த நீர் ஆகாரத்தை அருந்துவதால் உடலுக்கு குளிர்ச்சியும், கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கும்.
காலையில் நாம் முதன் முதலில் பருகுவது உடல் நிலையை பொறுத்தும், சூழ்நிலையை பொறுத்தும்தான் இருக்க வேண்டும்