உங்கள் குழந்தை வீட்டுப்பாடம் செய்ய உதவிகிறீர்களா?
பல வீடுகளில் குழந்தைகளின் வீட்டுப் பாடங்களை பெற்றோர்தான் செய்து கொடுக்கின்றார்கள்.
கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு வீட்டு பாடங்கள் செய்ய கொடுப்பது அவர்களை செம்மைப்படுத்தவும், ஒழுக்கத்தை கற்பிக்கவும் தான்.
இது நம்முடைய கல்வி கட்டமைப்பில் உள்ள முக்கியமான அம்சமாக வீட்டு பாடங்களை பெற்றோர் உதவி உடன் குழந்தை செய்யலாமே தவிர, பெற்றோரை அதை முழுமையாக செய்து கொடுக்கக் கூடாது.
ஒரு விளையாட்டு வீரனுக்கு எவ்வாறு பயிற்சியாளர் எப்போதும் தேவைப்படுகிறாரோ? அதுபோல பெற்றோரும் குழந்தையின் வாழ்க்கைக்கு தேவைப்படுவார்கள்.
விளையாட்டு வீரனுக்கு பதிலாக பயிற்சியாளர் ஓடவோ? உடற்பயிற்சி செய்யவும் மாட்டார் .
மாறாக சிறந்த முறையில் வழி நடத்துவார்.
அதையே பெற்றோரும் பிள்ளைகள் இடத்தில் பின்பற்ற வேண்டும்.
தொழில்நுட்பத்தின் அதி தீவிர வளர்ச்சியால் இந்த தலைமுறையை சேர்ந்த பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது .
இதனால் குழந்தைகளின் கற்பனை திறன் முடங்கி விடுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் வீட்டுப் பாடம், செயல்முறை வகுப்புகள் போன்றவை தான் குழந்தைகளின் கற்பனை திறனை வளர்க்கும்.
குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை அவர்களே செய்வதற்கு உற்சாகப்படுத்தும் சில விஷயங்கள் இங்கே :
=> குழந்தைகளை அவர்கள் விரும்பும் இடத்தில் இருந்தபடி வீட்டுப் பாடும் செய்ய அனுமதியுங்கள்.
அந்த இடத்தில் டிவி, மொபைல் போன்ற கவனத்தை திசை திருப்பும் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
=> குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வீட்டுப்பாடம் அவர்களின் வயதிற்கு மிக அதிகம் என நினைத்தால் அதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் .
மாறாக வீட்டுப்பாடத்தை நீங்களே செய்யாதீர்கள்.
இது அலட்சியத்தை ஏற்படுத்தும்.
=> வீட்டுப்பாடம் என்பது குழந்தைக்கு புதியதொரு விஷயத்தை கற்பிப்பது ஆகும் .
அதை உரையாடலின் வழியாகவும், வழி நடத்துதலின் மூலமாகவும் நீங்களே அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் .
=>வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தையோடு பாடம் தொடர்பாக உரையாடிக் கொண்டே இருங்கள்.
=> வீட்டுப் பாடத்தை குழந்தைகள் சரியாக செய்யவில்லை என்பதற்காக அவர்களை தண்டிக்காதீர்கள்.
உன்னால் இதை செய்ய முடியும் எனக் கூறிய ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள் .
=>வீட்டு பாடத்தை குழந்தைகள் நல்ல முறையில் செய்தால் அவர்களை பாராட்டி பரிசளியுங்கள்.
=> காபி மேக், ஸ்டடி டேபிள், பழ கூடை, புத்தகப்பை என அவர்களுக்கு உதவும் விஷயங்களை மட்டும் கொடுக்கலாம்.
=> வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தைகளுக்கு சிறிது நேரம் இடைவெளி கொடுங்கள்.
=> நண்பர்களோடு இணைந்து வீட்டுப்பாடம் செய்ய வேண்டுமென குழந்தை விரும்பினால் அதற்கு ஏற்ற சூழலையும் உங்கள் மேற்பார்வையில் ஏற்படுத்திக் கொடுங்கள்.
குழு உணர்வு மேலோங்க இது சிறந்த பயிற்சியாகும் .
=>அத்தகைய சமயங்களில் உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்.
=> எப்போதும் குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீர்கள் .
=>அடிக்கடி ஆசிரியரை சந்தித்து பள்ளியில் உங்கள் குழந்தைகள் எவ்வாறு பயிலுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.