ஒவ்வாமை அலர்ஜியிலிருந்து விடுபடுவது எப்படி?
தும்பல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, மூக்கு அரிப்பு, வறட்டு இருமல், ஆஸ்துமா, நெஞ்சு இறக்கம், சுவாசத்தில் விசில் சத்தம் கேட்பது அலர்ஜியின் எதிரொலி .
அலர்ஜி ஏற்பட்டால் கண்களில் நீர் வடிதல், எரிச்சல், கண்கள் சிவப்பது, இமைகள் வீங்குவது போன்றவை அதன் அறிகுறிகள் ஆகும் .
அலர்ஜி உள்ளவர்கள் எந்த ஒரு பிராணியையும் வீட்டில் வளர்க்காமல் இருப்பதே நல்லது.
பூனை, நாய், முயல், கிளி போன்றவற்றை தொட்டு தூக்குவது முத்தம் கொடுப்பது கூடாது .
வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
வீட்டு சுவருகள் மற்றும் ஜன்னல் கம்பிகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.
படுக்கை விரிப்புகளும் மற்றும் தலையணை உறைகளை வாரம் ஒரு முறை வெந்நீரில் ஊற வைத்து அலசி சுத்தம் செய்ய வேண்டும்.
திரைச்சீலைகளை அடிக்கடி மாற்ற வேண்டும் .
படுக்கை அறையில் தட்டுமுட்டு சாமான்களை வெட்டியாக அடுக்கி வைக்கக் கூடாது.
அடுக்கு மாடியில் வசிப்பவர்களுக்கு அலர்ஜி நோய்கள் ஏற்பட கரப்பான் பூச்சி தான் முக்கியமான காரணம்.
வீட்டில் உள்ள உணவு பொருட்களை சுகாதார முறைப்படி மூடி பாதுகாப்பதன் மூலம் கரப்பான் பூச்சி பெருகி வருவதை தடுக்க முடியும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து வீட்டை சுத்தப்படுத்துவது அவசியம்.
வளர்ந்த நாடுகளில் வளர்ப்பு பிராணிகளால் அலர்ஜி ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.