ஹெப்பி பெட்ரூம்
வீட்டில் அறை எப்படி அமைக்க வேண்டும்? எப்படி தூய்மையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும் ? என்றெல்லாம் கவனம் செலுத்துகிறோம். ஆனால் படுக்கை அறைக்கு அப்படியே முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், ஸ்கூல் பேக் முதல் லேப்டாப் , டிவி ரிமோட் , அழுக்குத் துணி என சகலமும் படுக்கையறையில் தான் வசித்துக் கொண்டிருக்கும்.
படுக்கையறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது.
ஏனெனில் தூக்கம் நம் அன்றாட வாழ்வின் அத்தியாவசியங்களும் தவிர்க்க இயலாது ஒன்று.
ஒருநாள் தூக்கம் கெட்டுப் போனாலும் மறுநாள் எந்த வேலையும் இயல்பாக இருக்காது.
படுக்கை அறையில் என்னென்ன இருக்க வேண்டும் என்று கேட்டால் படுக்கை மட்டும்தான் இருக்க வேண்டும்.
படுக்கையறையை தூக்கத்துக்கும், குடும்ப உறவு வலுப்படுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் .
மற்ற பொருட்கள் படுக்கையறையில் இருப்பது தூக்கமின்மைக்கும் , குடும்பத்தில் அமைதியின்மைக்கும் வழி வகுத்து விடும்.
படுக்கை அறையில் டிவி வைப்பது தவறான பழக்கம்.
குறைந்த பட்சம் தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாவது டிவி, மொபைல் உள்ளிட்ட ஒளிர் திறைகளை பார்க்காமல் இருக்க வேண்டும்.
அப்போதுதான் கண்களுக்கு முழு ஓய்வு கிடைக்கும்.
நரம்புகள் சீராக இயங்கும்.
ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பவர்கள் புத்தகங்களை படுக்கையறைக்கு உள்ளே அனுமதிக்க கூடாது.
படுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது கண்களுக்கும் நல்லது அல்ல.
படுக்கை அறையில் நூலகம் என்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம் ஆனால் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல .
எனவே நூலகம் வீட்டில் வேறு எங்காவது இருக்கட்டும்.
தூங்குவதற்கு முன் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால் ஹாலில் அல்லது வேறு அறையில் அமர்ந்து படித்துவிட்டு குறித்த நேரத்தில் படுக்கைக்கு திரும்ப வேண்டும் .
நள்ளிரவில் தூக்கம் கலைந்தால் படுக்கையில் நிறைந்தபடியே செல்போனை பார்ப்பது, டிவி பார்ப்பது போன்றவை தவறான பழக்கங்கள் கூடாது.
வேறு அறைக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்து புத்தகம் படித்து விட்டோ, வெறுமண அமர்ந்து விட்டோ வரலாம்.
பாதி தூக்கத்தில் எழுந்து செல்போன், டிவி பார்க்கக் கூடாது.
தூக்க மாத்திரைகள் போன்றவையும் படுக்கைக்கு அருகில் வைத்திருக்கக் கூடாது.
சிலர் சற்று தூக்க வராமல் இருந்தாலும் தூங்க முயற்சிக்காமல் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்து விடுவார்கள்.
இதனால் மாத்திரை எடுத்துக் கொண்டால் தான் தூக்கம் வரும் என்ற பழக்கம் வந்துவிடும்.
படுக்கை அறையில் நேர்மறையான அதிர்வலைகள் இருப்பது நல்லது.
தீய முடிவுகள் எடுப்பதற்காக விவாதிப்பது, வாதம் செய்வது போன்றவற்றை படுக்க அறையில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
இது அந்த இடத்தின் நல்ல அதிர்வுகளை கெடுக்கும் .
படுக்கை அறையில் சண்டை போடவே கூடாது.
முடிந்தவரை படுக்கையறை பகலில் நன்கு வெளிச்சமாகவும், இரவில் இருட்டாகவும் இருப்பது நல்லது.
ஜன்னல்கள், படுக்கை தலையணை உரைகள் எல்லாம் அதற்கு ஏற்றது போல் இருக்க வேண்டும்.
அடர்ந்த இருளில் தூங்கும் போது தான் நம் உடலில் என்ற ஹார்மோன் சுரக்கும்.
படுக்கை அறையின் சுவர்கள் அமைதி தரக்கூடிய வெளிர் நிறங்களாக இருக்க வேண்டும் .
படுக்கை அறையில் புகைப்படங்கள், ஓவியங்கள் வைக்கலாம் .
அமைதி , மகிழ்ச்சியை தரக்கூடிய இயற்கை காட்சிகள், புகைப்படங்களை வைக்கலாம் .
வெளியில் இருக்கும் சத்தங்கள் படுக்க அறையினுல் கேட்காமல் இருந்தால் நல்லது.
அமைதியான இனிமையான தூக்கம் வந்துவிடும் .
மொத்தத்தில் படுக்கை அறையை தூங்குவதற்கு மட்டும் உபயோகித்தாலே போதும் .
தூக்கம் எந்த விதத்திலும் பாதிக்காது.