செல்லப் பிராணிகள் வளர்ப்பு டிப்ஸ்
எந்த பிராணியாக இருந்தாலும் அதை தூக்கி கொஞ்சினாலோ ? விளையாடினாலோ ? கண்டிப்பாக கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
நாயை நெற்றியில் அல்லது உடலில் ஒட்டி இருக்கும் கழிவிலிருந்து நாடா புழு முட்டை கிருமி பரவ வாய்ப்புகள் உள்ளது என்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அலர்ஜி பிரச்சனை இருப்பவர்களுக்கு நாய், பூனையின் ரோமம் உதிர்வதால் பிரச்சனை உண்டாகலாம் .எனவே டாக்டர் ஆலோசனையை பெற்று அதன்படி நடப்பது நல்லது.
எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசிகள் போட வேண்டும் .
நாய்களுக்கு பூச்சி மருந்தும், சீரான இடைவெளியில் கொடுக்க வேண்டும். இல்லையெனில் நாடா புழு வந்து விடும். அதனால் வளர்ப்பவற்கு பிரச்சனை ஏற்படும்.
மாமிசம், மீன் போன்றவை சமைக்காமல் கொடுக்கக் கூடாது.
செல்லப்பிராணி தங்கும் இடம் கூண்டு நன்கு விசாலமாக இருக்க வேண்டும்.
அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.