பெண்களுக்கான மருத்துவம்

பெண்களுக்கான மருத்துவம்

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளைப் பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் .

வயிற்று சதை குறைய, சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை எனது தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

 காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய் மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறிவிடும்.

 தயிரை தலைக்கு தேய்த்து ஊறியவுடன் சீயக்காய் தூள் போட்டு குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

 பப்பாளிக்காயை கூட்டு செய்து சாப்பிட்டால் தாய்மார்களுக்கு பால் சுரக்கும் .

மஞ்சளையும் வேப்பிலையும் அரைத்து பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறிவிடும் .

பெண்கள் மாதவிலக்கு காலத்தில் கோதுமை கஞ்சி சமைத்து உண்டு வந்தால் சீராகும்,

கருத்துரையிடுக

புதியது பழையவை