சோம்பின் பயன்கள்
நம் உடலில் முக்கிய உறுப்பு ஈரல்.
ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும் .
சோம்பு பல உடல் தொந்தரவுகளை போக்கி சுகம் அளிக்கும் சஞ்சீவி என்றால் மிகையில்லை .
இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.
சோம்பை லேசாக வறுத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை ஒரு கரண்டி சாப்பிட ஈரல் தொடர்பான நோய்களைப் போக்கும்.
பசியில்லாமல் மந்ததாக இருக்கும் நேரத்தில் தனியாக சோம்பையும் மென்று சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
பெருஞ்சீரகத்தை இளம் வருவதாக வறுத்து பொடித்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட கருப்பை தொடர்பான நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
நாள் பட்ட வறண்ட இருமல் இரைப்பு இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை பருகி வந்தால் சரியாகும்.
மூக்கில் நீர் வடிதல் குணமாகும் .
குளிர் காய்ச்சலுக்கு சோம்பை கொதிக்க வைத்த நீரை வடிகட்டி தர குணம் கிடைக்கும்.
பயனுள்ள தகவல்
பதிலளிநீக்கு