படுக்கையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தவறு
ஸ்மார்ட்போன் சிலருக்கு ஆறாவது விரல்.
சில நிமிடங்கள் கூட அதை பிரிந்து இருக்க முடியாது.
அவர்களால் கையில் எது இருக்கிறதோ? இல்லையோ? பக்கத்தில் போன் இருந்தாக வேண்டும் என்கிற இந்த பழக்கம் மிக தவறானது என்று எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
மருத்துவர்களும் கூட இதன் பாதிப்புகள் குறித்து கவலை உடன் விவரிக்கின்றார் .
ஆனாலும் இரவு தூங்கும்போது கையில் போனை எடுத்துப் போகிறார்கள் பலர்.
காலையில் விழித்து பாத்ரூம் போகும்போது போனை எடுத்து போய் நோண்டுகிறார்கள்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்றில் ஸ்மார்ட் ஃபோன்களை படுக்கை துணையாக எடுத்துக் கொண்டு போய் பக்கத்தில் வைத்துக் கொண்டு உறங்குகிறோம் என 74 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர் .
இவர்களில் கணிசமானவர்கள் போன் கையில் இருப்பதால் முழுமையாக தூங்குவதே இல்லை .
யாருக்காவது செய்திகள் அனுப்பியே தங்களது இரவை கழிப்பவர்கள் இரண்டு சதவீதம் பேர்.
போர்வையை போர்த்திக் கொண்டு உள்ளே போனை மேய்த்தபடியிருக்கும் இளைய தலைமுறையினர் அநேகம் பேர் .
இந்த பழக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆபத்தானவை அவை:
ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளியானது மெலட்டாேனின் எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது.
நிம்மதியான தூக்கத்துக்கு மெலட்டோனின் ஹார்மோன் அவசியம்.
மெலட்டோனின் இரவில் தான் நன்கு சுரந்து நமக்கு தூக்கத்தை வரவழைக்கும் .
ஸ்மார்ட்போனில் இருக்கும் எல்.இ.டி விளக்கு நீல நிற ஒளியை அதிக அளவில் வெளிப்படுத்தி உடலுக்கு பகல் போல காண்பித்து ஏமாற்றி விடுகிறது .
இதனால் உடலின் தூக்க சுழற்சி பாதிப்படுகிறது.
இது தொடர்ந்தால் நான் நாளடைவில் இன்சோம்னியா எனும் தூக்கமின்மை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
மெலட்டாேனின் ஹார்மோன் அளவு குறைவதால் தூக்கம் கெடுவது மட்டுமல்ல பெண்களுக்கு மார்பகம், சினைப்பை புற்றுநோயும், ஆண்களுக்கு விந்து பை புற்றுநோயும் வரும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.
ஸ்மார்ட்போன், லேப்டாப், எல்.இ.டி டிவி போன்றவற்றை படுக்கையறையில் வைத்துக் கொள்ளக் கூடாது.
தூங்குவதற்கு முன்பாக அவற்றின் ஒளி திரைகளை பார்க்கவும் கூடாது.
அதை வெளிப்படுத்தும் எல்.இ.டி விளக்கின் வெளிச்சம் கண்களில் உள்ள ரெட்டினாவை பாதிப்பதால் பார்வை குறைபாடு ஏற்படும் .
ஸ்மார்ட் போன் விஷன் சிண்ட்ரோம் என்ற பாதிப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும் .
இது கண்களின் பார்வை சக்தியை முடக்கிவிடும் .
விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது அதன் விளைவுகள் அச்சம் தரக்கூடியவை.
விழித்திரையை பாதித்து கண் பார்வை குறைபாடு ,தலைவலி ,கண்களில் ஈரப்பதம் குறைந்து எரிச்சல் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் வருகின்றன.
லெப்டின் எனும் வேதிப்பொருள் சுரப்பதும் குறைகிறது.
உணவு சாப்பிட்ட பிறகு திருப்தி உணர்வை ஏற்படுத்துவது இதன் வேலை .
இது குறைவதால் பசியுணர்வு இருந்து கொண்டே இருக்கும் .
அதிகம் சாப்பிட தூண்டி பருமன் நோய்க்கு வழிவகுக்கும் .
நேரத்தையும், சூழலையும் மறந்து போனில் மூழ்குவதால் பலர் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை.
இது நீரழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
அத்துடன் மன அழுத்தம், மன சோர்வு போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது.