தாய்ப்பால் கட்டும் பிரச்சினைக்கு தீர்வு
குழந்தைகள் பால் சரியாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் பால் கட்டிக் கொள்ளும் பிரச்சனை தாய்மார்களுக்கு ஏற்படும் .
அவ்வாறு ஏற்பட்டால் என்ன பிரச்சனை? என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான குறிப்புகள் இதோ:
தாய்ப்பால் கட்டிய இடத்தில் சிறிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு மார்பகத்தில் வைக்க வேண்டும்.
அதன் மீது சிறிய துணியை வைத்து ஒரு மணி நேரம் அழுந்தும்படி செய்ய வேண்டும்.
வெந்நீர் வைத்து மார்பு பகுதியில் மெதுவாக மசாஜ் செய்து தாய்ப்பாலை வெளியேற்றலாம்.
வெந்நீர் வைத்து மசாஜ் செய்தால் தாய்ப்பால் கட்டிக் கொள்ளும் பிரச்சனை விரைவில் குணமாகும்.
பால் கொடுக்கும் போது விலங்குகளை போல் தாய்மார்கள் குனிந்து கொண்டு பால் தர வேண்டும்.
மார்பகப் பகுதி குழந்தைகளின் வாயில் படும் அளவுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த முறை ஈர்ப்பு வீசையின் மூலம் மார்பகம் கட்டி வலி இல்லாமல் இருக்கும் .
இரண்டு கோப்பைகள் அளவுக்கு தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்து அதில் கற்றாழை சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்த பிறகு ஒரு துணியால் 15 நிமிடம் மசாஜ் செய்தால் பால் கட்டும் பிரச்சனை தீரும்.
தாய்ப்பால் கட்டிருக்கும் இடத்தில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும் மார்பக பகுதியில் உண்டாகும் காயங்களில் கூட இந்த தேங்காய் எண்ணெயை தடவினால் மார்பக காயங்கள் விரைவாக மாறும்.
மார்பு பகுதியில் தாய்பால் கட்டி உள்ளவர்கள் நாள்தோறும் ஒரு கோப்பை அன்னாசி பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம் .அன்னாசியில் இருக்கும் ப்ரோமெலைன் மார்பகத்தில் உள்ள வீக்கத்தை குறைத்து, அடைத்து இருக்கும் மார்பக குழாய்களை சரி செய்யும் .
தாய்ப்பால் கட்டிய பிரச்சனை உள்ள தாய்மார்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பூண்டை மசித்து சாப்பிட்டு வர வேண்டும். பச்சைப்பூண்டு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் அதனால் பூண்டு சிறிதளவு தேன் மற்றும் தண்ணீரில் பூண்டை ஊறவைத்து கூட தாய்ப்பால் கட்டி பிரச்சனை இருப்பவர்களுக்கு தாராளமாக சாப்பிடலாம்.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே ஆகாரம் ஆறு மாதங்கள் வரை தண்ணீர் கூட தேவை இல்லை குறைந்தது மூன்று மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கண்டிப்பான ஆலோசனையாக இருக்கிறது.
முன்னோர்கள் காலத்தில் குழந்தைகளின் ஏழாம் மாதத் தொடக்கத்தில் திட உணவுகளை குழந்தைக்கு கொடுக்க தொடங்கி விடுவார்கள்.
இனிப்பு நிறைந்த உணவுகளை சப்பு குட்டி சாப்பிடும் குழந்தைகள் கார உணவையும் உஸ் உஸ் சாப்பிடவே செய்வார்கள் .
குழந்தைக்கு எல்லா சுவையும் சேர வேண்டும் என்பதில் கவனம் எடுத்து நம் முன்னோர்கள் குழந்தைக்கு உணவு தயாரித்தார்கள்.
குழந்தைக்கு உணவு கொடுக்கத் தொடங்கும் போது அதாவது ஆறு மாதமானதும் குழந்தைக்கு உணவில் பெருங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரிசி, பருப்பு உடைத்து, காய்கறிகளை சேர்த்து நன்றாக வேக வைத்து மசித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
அப்போது பெருங்காயம் சிட்டிக்கு அழைப்பு சேர்த்து குலைத்து உணவோடு கொடுக்க வேண்டும்.
அடுத்து உப்பு சேர்த்த கஞ்சி கொடுக்கும் போது இதே அளவு பெருங்காயம் எடுத்துக் கொள்ளலாம்.
பெருங்காயம் குழந்தைக்கு செரிமானத்தை தூண்டுகிறது.
மேலும் வயிற்றுப் பொருமல் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது .
மேலும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி.
குழந்தையின் உணவில் மஞ்சள் ஒரு சிட்டிகை கலந்து கொடுக்கலாம்.
பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு மற்றும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் மஞ்சள் தூள் நிச்சயம் உதவும்.