காதலர் தினம் பிறந்த வரலாறு

காதலர் தினம் பிறந்த வரலாறு
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே இளைஞர்களுக்கு நெஞ்சமெல்லாம் பட்டாம்பூச்சிகள் பறந்து நினைவுக்கு வருவது காதலர் தினம் தான்.

 காதல் நோய்க்கு ஆட்பட்ட இளைஞர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பிப்ரவரி 14-ஆம் நாளை மிக மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

 காதலை எப்படி தெரிவிப்பது என்று கண்ணாடி முன் ரகசியமாக ஒத்திகை பார்க்கும் படலங்களும், அரங்கேறுவது உண்டு.

 இளைஞர்கள் மட்டுமல்ல காதலர் தினத்தை மிக மிக ரொமான்டிக் மூவ்மெண்டாக மாற்ற சில நடுத்தர வயதான தம்பதிகளும் சந்தில் சிந்து பாடுவது உண்டு .

ரோமானிய அரசனின் காலத்தில் தான் காதலர் தினம் கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 கிளாடியுஸ் மிமி என்ற அரசனின் ஆட்சிக் காலத்தில் ரோமபுரி நாட்டில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

 இனி யாரும் காதலிக்க கூடாது.

 அது மட்டுமல்ல இனி அந்த நாட்டில் யாரும் திருமணம் செய்து கொள்ளவே கூடாது எனவும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தான்.

 இந்த உத்தரவு மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

 குறிப்பாக இளைஞர்களை காதல் செய்வதற்கு முன்பே தலையை கிறங்க வைத்தது.

 அப்போது அந்த நாட்டில் வாழ்ந்து வந்த காதலர்களுக்கு ஆதரவாளரான வாலண்டைன் என்ற பாதிரியாரை இளைஞர்கள் அணுகினர் .

அரசனின் அறிவிப்பை மீறி அவரை அணுகிய அனைவருக்கும் ரகசியமாக திருமணங்களை நடத்தி வைத்தார் பாதிரியார் வாலண்டைன்.

 இதனை கேள்வி உற்ற மன்னன் ஆவேசமடைந்து பாதிரியார் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான்.

 உணவும், உடைகளும் மறுக்கப்பட்டன.

 பிறகு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு மரண மரண தண்டனை அளிக்க ஆணையிட்டான்.

 அதை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.

 இதற்கிடையே பாரதியார் வாலண்டைனுக்கும் சிறை காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே ஒரு மென்மையான காதல் மலர்ந்தது.

 சிறைகாவலருக்கு இவர்களின் காதல் தெரிய வந்ததும் வெகுண்டு எழுந்தான்.

 அரசரின் ஆணை வேறு அவனை பயமுறுத்த தனது மகள் அஸ்டோரியாசை வீட்டு காவலில் சிறை வைத்து அவர்களது காதலை துண்டிக்க துணிந்தான் .

வாலண்டன் அஸ்டோரியஸ் மீது தான் வைத்திருந்த காதலை கவிதையாக்கி ஒரு அட்டையின் மீது எழுதி தான் வடித்த முதல் காதல் வாழ்த்து அட்டையை தன்னை காண வந்த ஒரு நபரின் மூலம் அஸ்டோரியசுக்கு செய்தி அனுப்பினார்.

 மேலும் அவரிடம் ஒரு கோரிக்கையும் வைத்தார்.

 தனது காதலி பார்வையற்றவர் என்பதால் இதனை அவளுக்கு வாசித்துக் காட்டு அப்போதுதான் எனது அளவற்ற ஆத்மாந்த காதலின் ஆழத்தை அவள் புரிந்து கொள்வாள்.

 அரசரின் செவிக்கு இந்த செய்தி எட்டியது அனைவருக்கும் திருமணம் செய்து வைக்கிறாரே என்று சிறையில் அடைத்தால் தனது காதலை டெவலப் செய்து எனது உத்தரவை செல்லா காசாக்கி விட்டாரே என சினம் கொண்டார் .

பல நாட்கள் தனது அமைச்சரவினரிடம் ஆலோசனை நடத்தி வாலன்டைனை கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும் என்று சிறை பணியாளர்களுக்கும், காவலர்களுக்கும் உத்தரவிட்டான்.

 பாதிரியாரை அனைவரும் கல்லால் அடித்து சித்திரவதை செய்தனர்.

 பிறகு அவரது கழுத்தை வாளால் அறுத்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார்.

 அவர் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14-ஆம் தேதி கிபி 270 ஆம் ஆண்டு காதலர்களுக்காக காதலுக்காக உயிர் துறந்த பாதிரியார் வாலண்டைனின் தியாகம் மக்களால் பேசப்பட்டு போற்றப்பட்டு வந்தது .

இதற்கு காரணமான அந்த மன்னனின் ஆட்சி முடியும் தருவாயில் அந்த நாளை வாலண்டைனின் நினைவு தினமாக காதலர் தினமாக அறிவிக்கப்பட்டது.
 தற்போது இளைஞர்களின் தேசிய தினமாக அது மாறி பூக்கடை நடத்துபவர்களுக்கும், கிப்ட் ஷாப்புக்கும் லாபத்தை ஈட்டி தருகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை