கசப்பான நோய்

கசப்பான நோய் 
நீரழிவு என்னும் கசப்பான நோய் வந்துவிட்டால் தேநீரில், காபியில் சர்க்கரை போடக்கூடாது என்பார்கள்.

 ரொட்டி கேக்கு, இனிப்பு பண்டங்கள், பலகாரம் சாப்பிடக்கூடாது.

 பழங்கள் கூடாது.

 வாழைப்பழம் கூடாது என்பார்கள்.

 அரிசி சோறு கூடாது, அதிகம் சாப்பிடக்கூடாது. விருந்து சாப்பாடு கூடாது, பிறகு ஒரு கட்டத்தில் சாப்பிடவே கூடாது என தடுப்பார்கள்.

 விருந்தும் இல்லை என வாழ்வது அவ்வளவு துன்பம் .

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது.

 விருந்து நடக்கும்போது இலையில் இனிப்பு விழும்.

 மனைவியோ? மக்களோ? பக்கத்தில் இருந்து கொண்டு தொடாதே என தடுப்பார்கள்.

 மாம்பழம் கூடவே கூடாது .

வாழைப்பழம் வேண்டுமென்றால் அரை சாப்பிடலாம்.

 சீனிக்கு பதிலாக நாட்டு சர்க்கரை சாப்பிடலாம்.

 கல்கண்டு, தேன் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் தடுப்பார்கள்.

 சர்க்கரை நோய் என்னும் கசப்பான நோய்க்கு நாம் ஆட்பட்டால் இது போன்ற இன்னும் பல தடுப்பணை போடுவார்கள்.

 சர்க்கரை நோய் வந்தால் பிற நோய்களுக்கும் இடம் தரும் .

கண் பாதிக்கும்.

 சோர்வு மிகவும் வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு பலவீனம் ஏற்படும்.

 அடிக்கடி சிறுநீர் போகும்.

 பலவீனம் ஏற்படும்.

 திடீரென போகும் போது அவசரமாக வரும் .

அதிகம் போகும்.

 அடிக்கடி சிறுநீர் முட்டி இடுப்பு வலி வரும் .

ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் கழித்து விடுவர் .

பெண்கள் படும் பெரும் துன்பம் அதிக நேரம் அடக்குவதால் அடக்குவதாலேயே சிறுநீர் தொற்று, சிறுநீருக்கள் கருப்பை பாதிப்பு ஏற்படும் .

நோய் 40% மக்களை பாதிக்கிறது.

 இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் முதியவர்களை மட்டும் இல்லாமல் இளைஞர்களையும், குழந்தைகளையும் கூட பாதிக்கிறது.

 எனினும் உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு முறையான அளவான சத்துள்ள உணவு ஆகியவை இவை வராமல் தடுக்கும் .

தொடக்க நிலையில் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உணவு முறை பயன் தரும்.

 எளிய சத்துள்ள நார் உணவுகள், காய்கறிகள், நல்லவை பசித்துப் புசி என்பதும் நல்ல மென்று உண்பது கட்டாயம்.

 குறைந்த அளவான உணவை 1/4 மணி நேரம் சாப்பிடுவீர்கள் என்றால் அதனையே அரை மணி நேரம் சாப்பிட வேண்டும் .

மெல்ல நன்றாக மென்று கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீருடன் உண்ணுங்கள்.

 இப்படி வாழ்வியல் மாற்றம் கொண்டால் உடல் ரீதியாக மாற்றம் தெரியும் .
நோய் கவலையை எளிதில் கடக்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை