செருப்புக்கு அக்கப்போரா

ஒரு காலை நேர.. நடைப்பயணத்திற்கு பிறகு, ஒரு டாக்டர்கள் குழு, சாலையோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள்...*

அப்போது ஒருவர் லேசாக காலை சாய்த்து சாய்த்து தங்களை நோக்கி நடந்து வருவதை, அவர்கள் கண்டார்கள்.

ஒரு மருத்துவர் வருபவரை பார்த்து: "அவருக்கு இடது முழங்காலில் கீல்வாதம் உள்ளது.." என்றார்.

இரண்டாவது மருத்துவர்: இல்லை.. "அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ் உள்ளது .." என்றார்.
மூன்றாவது மருத்துவர்: அவருக்கு, "ஒரு கணுக்கால் சுளுக்கு .." என்றார்.

நான்காவது மருத்துவர்: அந்த "மனிதனால் முழங்காலை தூக்க முடியாது, அவருக்கு லோயர் மோட்டார் நியூரான்கள் இருப்பதாக தெரிகிறது .." என்றார்.

ஐந்தாவது மருத்துவர்: "ஆனால் எனக்கு அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்தரிக்கோல் நடை பிரச்சனை என்று தோன்றுகிறது," என்றார்.

ஆறாவது மருத்துவர் அவருக்கான நோயறிதலை அறிவிப்பதற்கு முன்பு...

அந்த மனிதர், அந்த டாக்டர் குழுவிடம் வந்து, "எனது ஒரு கால் செருப்பு அறுந்து விட்டது, அதை சரி செய்யக்கூடிய செருப்பு தைப்பவர் யாராவது இங்கு அருகில் இருக்கிறாரா.?" என கேட்கிறார்.


கண்ணால் காண்பதும் பாெய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்

கருத்துரையிடுக

புதியது பழையவை