கூட்டுக்குடும்பம்

 கூட்டமாய் வாழ்ந்து சென்ற கூட்டம்

 அதனின் வாரிசுதாரர்கள் நாம் ஆவாேமே!

தனி கூட்டுப் பறவையாய் பிரிந்ததெனோ?

 பாசத்தைக் கொட்டும் பாட்டி தாத்தா

 அறிவை தட்டும் பெரியப்பா சித்தப்பா

 சமையலில் கலக்கும் சித்தி பெரியம்மா

 தோழமையாய் சேரும் அவர்களின் குழந்தைகள்

 எவ்வளவு பெரிய பிரச்சனைகள் தோன்றினாலுமே!

இல்லத்திலே அடங்கிடும் அழகிய கட்டமைப்பு 

உறுதுணை உதவிக்கு என்றும் பஞ்சமில்லையே!

 எல்லாம் இன்று காணாமல் ஆனதே!

 தோப்புகள் எல்லாம் தனிமரமாய் ஆனதே!

 மீண்டும் திரும்புமா வாழ்வின் வசந்தமே!


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

3 கருத்துகள்

புதியது பழையவை