ரத்த சோகையை தவிர்க்க சில எளிய வழிகள்
பெரும்பாலமான உடல் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் ரத்த சோகைதான் .
இந்த ரத்த சோகை ஆண், பெண் இருவரையும் பாதிக்கும் இருந்தாலும் ஆண்களை விட பெண்களை ரத்த சோகை அதிகம் தாக்குகிறது.
இது ஒரு நோய் அல்ல ஆனால் அதிகப்படியான நோயாளிகளுக்கு ரத்த சோகையும் முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.
ரத்தசோகை என்பது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதோ அல்லது உடலில் ரத்த அணுக்கள் உருவாவதே குறைவாக இருப்பதே ஆகும்.
ரத்த சோகையின் அறிகுறிகள்
வெளிறிய முகம் அல்லது மெலிந்த தோல்.
கண்ணிமையின் உட்புற பகுதி வெளரி இருப்பது.
வெளிறிய ஈறுகள் .
பளபளப்பான மிருதுவான நாக்கு.
வெளியே விரல் நகங்கள் வளைந்த நகங்கள்.
பலவீனம், களைப்பு முகம் மற்றும் கால் வீக்கம், இருதய படபடப்பு, மூச்சு வாங்குதல்.
மண், சாம்பல், சுண்ணாம்பு இவைகளை சாப்பிட விரும்புவது.
ரத்த சோகையை தடுக்க தடுக்கும் முறைகள்
இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளான கம்பு , வரகு, கேழ்வரகு, அவல் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பசலைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கை, அகத்திக்கீரை உணவில் அதிகம் சேர்க்கலாம்.
பயிறு, மொச்சை பயிறு மற்றும் உள்ள பருப்பு வகைகளிலும் இரும்புச் சத்து உள்ளது.
வெல்லம், இறைச்சி, மீன், முட்டை இவைகளிலும் இரும்பு சத்து அதிகமான அளவு உள்ளது.
பழம் வகைகளில் ஆப்பிள், கருப்பு, திராட்சை , பேரிச்சை, மாதுளை என சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிற பழங்களை உணவில் அதிக அளவில் சேர்ப்பது ரத்த சோகையை கட்டுப்படுத்த உதவும்.
ரத்த சோகை குறைபாட்டை சரி செய்ய நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை விட இயற்கையான உணவு முறை மூலமாகவே ரத்த சோகையை சரி செய்வதில் ஈடுபடுவது சிறந்தது .
இயற்கை சூரணங்களான பொடி வகைகள் அல்லது மல்லி பொடி, கருவேப்பிலை பொடி, கரிசாலை பொடி, செம்பருத்தி பொடி, முருங்கைப்பொடி இவைகளை ரத்த சோகை தடுப்பதற்கு பயன்படுத்தலாம்.
வெள்ளரிச் சாறு, மாதுளை, மணப்பாகும நெல்லிக்காய், லேகியம் போன்ற ஊட்டச்சத்துக்களையும் சேர்க்கலாம்.
இவை ரத்த சோகையை கட்டுப்படுத்தும்.