ரூபாய் 90 கோடி ரோஜா
காதல் ஜோடிகள் தங்கள் அன்பின் வெளிப்பாடாக ரோஜாக்களை பகிர்ந்து கொள்வார்கள் .
அதற்காக 100 அல்லது 1000 ரூபாய் கூட செலவழிப்பார்கள்.
ஆனால் ரூபாய் 90 கோடிக்கு விற்கப்பட்ட ரோஜாவும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஜூலியட் ரோஜா என்ற அந்த ரோஜாவுக்கு கொடுக்கும் விலைக்கு ஒரு ஆடம்பர மாளிகையே வாங்கிவிடலாம்.
அப்படி என்ன அந்த ஜூலியட் ரோஜாவின் சிறப்பு வழக்கமான ரோஜாக்கள் போல் இல்லாமல் இதை வளர்ப்பது எளிதல்ல .
இதற்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது.
இந்த அரிய நேர்த்தியான பூவை புகழ்பெற்ற பூக்கள் நிபுணர் டேவிட் ஆஸ்டின் உருவாக்கினார்.
அவர் சுமார் 15 ஆண்டுகள் பல்வேறு ரோஜா வகைகளை கலப்பினப்படுத்தியதன் மூலம் இதை உருவாக்கினார் .
பாதாமி நிற கலப்பினமாக அறியப்படும் ஜூலியட் ரோஜா அதன் அழகு மற்றும் அரிதான தன்மைக்காக புகழ்பெற்றது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் இது பத்து மில்லியன் பவுண்டுகளுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 90 கோடிக்கு விற்கப்பட்டது .
அதன் மூலம் வரலாற்றில் அதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் விலை உயர்ந்த ரோஜாவாக புகழ்பெற்றது.
ஜூலியட் ரோஜா மிகவும் விலை உயர்ந்த ரோஜா மட்டுமல்ல உலகின் மிகவும் அழகான ரோஜாக்களில் ஒன்றாகும்.
இது மற்ற ரோஜாக்களில் இல்லாத ஒரு தனித்துவமான நறுமணத்தை கொண்டுள்ளது.
இன்றும் இதுதான் உலகின் விலை உயர்ந்த ரோஜாவாக உள்ளது.
தற்போது இதன் மதிப்பு சுமார் 15.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஜூலியட் ரோஜாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று இது வாடாமல் அல்லது உலராமல் குறைந்தது மூன்று ஆண்டுகள் புத்தம் புதிதாக இருக்கும் என்பதாகும்.