இரவில் தயிர் சாப்பிடலாமா?
தயிருக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தன்மை உண்டு .
அதனால் தான் பரவலாக அது உபயோகத்தில் இருக்கிறது.
தயிரில் உள்ளடங்கி இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் சீராக நடைபெற உதவும்.
குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் உடல் உஷ்ணத்துடன் காணப்படும்.
அதே சமயத்தில் தயிர் சாப்பிடுவது உடலில் சூட்டை தணிக்க உதவும்.
அதனால்தான் சாப்பிடும்போது தயிரை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள் சிலர்.
தயிறை இரவு உணவிலும் சேர்த்துக் கொள்வார்கள்.
இரவு நேரத்தில் உடலின் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படும் அந்த சமயத்தில் தயிரை சேர்த்துக் கொண்டால் சளி பிரச்சனை உருவாக வாய்ப்பு இருக்கிறது.
அதிலும் இருமல், ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாக இருப்பவர்கள் தயிரை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அது சளியை அதிகப்படுத்தி விடும் .
மோர் எல்லா நேரத்திற்கும் எல்லோருக்கும் ஏற்றது .
மோரில் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து பருகினால் அது உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் என்பதால் சைனஸ் உள்ளவர்கள் உடல் வெப்பநிலை சீராக்க பாதுகாக்கப்படும்.