போன் தரும் புது பிரச்சனைகள்

போன் தரும் புது பிரச்சனைகள்
முன்பெல்லாம் நல்ல நேரம் பார்த்துவிட்டு வெளியே கிளம்புவார்கள். இப்போது போனில் சார்ஜ் இருக்கிறதா? என்று பார்த்துவிட்டு தான் கிளம்புகிறார்கள்.

 மொபைல் போன்கள் நம் வாழ்க்கை முறையை தலைகீழாக புரட்டி போட்டு இருப்பது நிஜம்.

 மனிதர்களுடன் செலவழிப்பதை விட அதிக நேரத்தை ஃபோனில் செலவழிப்பதால் பல பிரச்சனைகள் உடல் நலம் , மனநலம், சமூகநலம், அறிவாற்றல் என்று எல்லா மட்டங்களிலும் அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று சொல்வதற்கு சில காரணங்கள் இங்கே உண்டு அவை:

 கண்களுக்கு பாதிப்பு 

நம் கண்கள் இந்த உலகத்தை நமக்கு காட்டும் அற்புத வரம் மொபைல் போன் வந்ததிலிருந்து நாம் நீண்ட தூரத்தில் பார்ப்பதை குறைத்து விட்டோம்.

 நம் முகத்துக்கு மிக அருகில் இருக்கும் போனின் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 இது கண்களுக்கு ஆரோக்கியமானது அல்ல.

 தூக்கத்துக்கு பாதிப்பு 

படுக்கையில் விழுந்த பிறகும் போனை கீழே வைக்க பலருக்கு மனம் இருப்பதில்லை whatsapp, facebook, இமெயில் என பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

 சிலர் போர்வையை பொருத்தப்படி ஃபோனை நோண்டுகிறார்கள்.

 ஒளித்திரையை முகத்துக்கு அருகவைத்தபடி பார்ப்பது நம் இயல்பான தூக்கத்தை கெடுக்கும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றனர்.

 உறவுக்கு பாதிப்பு 

நண்பர்கள், உறவினர்கள் கூட்டத்தில் இருக்கும் நேரத்தில் கூட சிலர் தங்கள் போனை பார்த்தபடி இருக்கிறார்கள்.

 இப்படி செய்பவர்களை நண்பர்களும், உறவினர்களும் வெறுக்கிறார்கள்.

 இப்படி சமூக உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது இந்த போன் .

 பாக்டீரியா பாதிப்பு 

நாள் முழுக்க நாம் எதை பயன்படுத்தினாலும் அதில் கிருமிகள் தொற்றிக் கொள்வது இயல்பு. செல்போனிலும் இது ஏற்படுகிறது.

 நாம் இதைக் காதுகளுக்கும், வாய்க்கும் அருகில் வைத்துப் பயன்படுத்துகிறோம் என்பது கூடுதல் ஆபத்தை ஏற்படுத்துகிறது.


கழுத்துக்குப் பாதிப்பு

நமது தலை, அதிக எடையுள்ள ஓர் உறுப்பு, கழுத்தும், முதுகெலும்பும்தான் அதைக் கச்சிதமாக தாங்கிப் பிடிக்கின்றன. 

நேர் கொண்ட பார்வையுடன் இருக்கும் போது இதில் எந்த பிரச்சனையும் எழுவதில்லை. 

ஆனால், நீண்ட நேரம் தலை குனிந்து செல்போன் திரையை பார்த்தபடியே அதில் டைப் செய்த படியோ இருப்பது சரியல்ல.

 போனை காதில் வைத்து, கழுத்தை சாய்த்து நீண்ட நேரம் பேசுவதும் சரியல்ல.

 இது கழுத்து மற்றும் மேல் முதுகு வலியை ஏற்படுத்துகிறது.

 பயணத்தில் பாதிப்பு 

வாகனம் ஓட்டிக்கொண்டே போன் பேசுகிறவர்கள் விபத்தை சந்திக்கும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகமாகிறது.

 அமெரிக்காவின் வர்ஜீனியா டெக்டிரான்ஸ் ஃபோர்டேஷன் இன்ஸ்டிட்யூட் ஆய்வில் தெரிய வந்த உண்மை இது .

வாகனம் ஓட்டும் போது இவர் என்ன செய்தாலும் கவனம் சிதையும் .

போன் பேசினால் இன்னும் அதிகமாக கவனம் சிதறும் .

செல்போனை பார்த்தபடி சாலையை கடக்கும் பாதுசாரிகளும் அதிக விபத்துகளை சந்திக்கிறார்கள் .

மனதுக்கு பாதிப்பு

மொபைல் போனை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மன அழுத்தமும் அதிகரிக்கிறது .

மன அழுத்தமும் அதிகரிக்கிறது ஆண் , பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் இது திகழ்கிறது .
ஸ்விடன் நாட்டின் கோதன்பர்க் பல்கலைக்கழக அறிஞர்கள் இருபது வயதை தாண்டியவர்கள் மத்தியில் ஓராண்டுக்கும் மேலாக செய்த ஆய்வில் இது உறுதியாகி உள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை