தோட்டம் சூப்பராக மாற
மிளகாய்ச் செடியில் பூக்கள் பூத்திருக்கும் போது சிறிது சர்க்கரை கலந்த தண்ணீரை செடியில் தெளித்தால் வண்டுகள் வந்து பூக்களை மொய்க்கும் .
அத்தனை பூக்களும் காயாகிவிடும்.
ரோஜா செடிகளுக்கு வாழைப்பழ தோலை நறுக்கி போட்டால் செடியும் நன்றாக வளரும்.
செழிப்பான பூக்களும் பூக்கும்.
செடிகளைச் சுற்றி ஆழமாக குழி வெட்டி வீட்டில் சேரும் காய்கறி தோல் போன்ற குப்பைகளை அந்த குழியில் நிரப்பி மண்ணை போட்டு மூடவும்.
அதை மக்கி செடிகளுக்கு உரமாகிவிடும்.
பூந்தொட்டிகளில் அவ்வப்போது காவி பவுடரை திக்காக கரைத்து பிரசால் அடித்து விடவும்.
சட்டி புதிது போல் பளபளக்கும்.
செடிகளும் பார்க்க பளிச்சென்று இருக்கும் .
வீட்டுத் தோட்டத்தில் எறும்பு புற்று இருந்தால் அங்கே பெருங்காய தூளை தூவி விடுங்கள் எறும்பு தொல்லை அறவே நீங்கிவிடும்.