கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
அடிக்கடி நா வறட்சி ஏற்படும். தாகத்தை தணிக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கி பருகுவது தவறு. இவை நெஞ்சு எரிச்சல், செரிமான கோளாறுகள் ,பசியின்மை போன்றவை ஏற்படுத்தும்.
நீர், மோர், ஐஸ் சேர்க்காத பழச்சாறுகள், பதநீர் போன்றவை பருகலாம்.
அதிக அளவு இறைச்சி உண்பது உடலின் உள்புற வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். எனவே கோடை காலத்தில் புரதம் உள்ள மீன் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது நன்மை தரும் .
அசைவ உணவுகளை குழம்பு வைத்து சாப்பிடுவது நல்லது.
காரம் அதிகம் உள்ள உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்டு டின்களில் அடைத்து வரும் உணவுகள் மற்றும் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு வரும் ஸ்னாக்ஸ்களை தவிர்க்கலாம்.
எண்ணெயில் பொறித்த உணவுகள் வயிற்றுக்குள் சென்று ஒருவித பாரமான உணர்வைத் தருவதோடு அஜீரணத்துக்கும் வழிவகுக்கும்.
மேலும் உடல் வெப்பத்தையும் இது கூட்டும்.
அவற்றை தவிர்த்து ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடுங்கள்.
எளிதில் கிடைக்கும் மாம்பழம், பலா போன்றவை இந்த சீசனில் மட்டுமே கிடைக்கும் என்றாலும் இவை உடலில் சூட்டை அதிகரிக்கும் என்பதால் அளவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளரி, தர்பூசணி, நுங்கு, இளநீர் அதிகம் சாப்பிடலாம்.
பூசணி, சுரைக்காய் போன்ற நீர் சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதிகப்படியான டீ, காபி குடிப்பது பசியின்மை, நெஞ்செரிச்சல் போன்றவற்ற ஏற்படுத்தும்.
அளவுக்கு மேல் எடுத்துக் கொண்டால் அதில் உள்ள காஃபின் உடலில் நீர் சத்தை குறைக்கும்.
உடலுக்குள் வெப்பம் அதிகரிக்கும். அவற்றைத் தவிர்ப்பது நல்லது.