கால் பாதம் பாதுகாக்க
வெளியே சென்று விட்டு வந்தால் நாம் உடனடியாக கால் பாதங்களை கழுவுவது வழக்கம்.
காரணம்
கால் வழியாகத்தான் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது .
கால் பாதங்கள் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் நம்முடைய உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
அதனால் அதை நன்கு பராமரிப்பது அவசியம்.
தினமும் குளிக்கும் போது பாதங்களுக்கு சோப்பு போட்டு தேய்க்க வேண்டும் .
விரல் இடுக்குகளிலும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும் .
கால் பாதங்களை வெதுவெதுப்பான நீரிலும், குளிர்ந்த நீரிலும் ஆக மாற்றி மாற்றி தினம் தோறும் ஐந்து நிமிடமாவது வைத்து எடுப்பது கால் தோற்றத்தை பாதுகாக்கும்.
கால்களுக்கும் பாதங்களுக்கும் வாரம் ஒரு முறை பாதாம் எண்ணையை நன்றாக தேய்த்துக் கொண்டால் மிருதுவாக இருக்கும் .
உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் அறை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதில் கால்களை கால் மணி நேரம் நனைய வைத்தான் அழுக்குகள் நீங்கி பாதங்கள் புத்துணர்ச்சி பெறும்.
கால் பாதத்தில் வெடிப்புகள் ஏற்பட்டால் அங்கு மருந்தாணி பத்து போட்டால் குணமாகும்.
நல்ல காற்றோட்டமான காலணிகளை அணிய வேண்டும் .
ஹை ஹீல்ஸ் செருப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கால் பாதங்களில் ஈரத் தன்மையை தக்க வைத்துக்கொள்ள தினமும் மாய்சரைஸ் கிரீம் பயன்படுத்தலாம்.