குழந்தைகளின் கல்வி செலவுக்கான சேமிப்பு
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும் புதிய கல்வி ஆண்டு மாணவர்களிடம் ஒருவித தாக்கத்தையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கும்.
ஆனால் பள்ளி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உணர்வு பல பெற்றோர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை.
பள்ளி கட்டணம் மட்டுமில்லாமல் புத்தகம், சீருடை, இதர கல்வி தேவைகள் என்று ஒவ்வொரு வருடமும் குழந்தைகளின் கல்விக்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடன் வாங்கி சமாளித்து விடலாம், நகைகளை அடகு வைத்து பள்ளி கட்டணம் கட்டி விடலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.
இதனால் பண விரயம் ஆவதோடு மன அழுத்தமும் அதிகரிக்கும் .
சரியான திட்டமிடுதல் மூலமே இந்த சவாலை உங்களால் சிரமம் இல்லாமல் எதிர்கொள்ள முடியும் .
அதற்கான வழிகளை தெரிந்து கொள்வோம் :
குழந்தைகளை தரமான பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படுவது தவறில்லை.
ஆனால் அதிக கட்டணம் வசூலிப்பை தான் நல்ல பள்ளிகள் என்று நினைப்பது தவறாகும்.
ஒரு பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்ப்பதற்கு முன்பு அதன் கட்டணங்கள், உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றதா? என்று சிந்திக்க வேண்டும் .
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கு செலுத்த வேண்டிய மொத்த கட்டணம் எவ்வளவு என்று பாருங்கள்.
உதாரணமாக உங்கள் குழந்தைக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 40 ஆயிரம் என வைத்துக் கொள்வோம்.
அதை 10 மாதங்கள் கணக்கிட்டால் மாதம் ரூபாய் 4000 ஆகும்.
நீங்கள் இரண்டு குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் இந்தத் தொகை மாதம் ரூபாய் 8000 உயிரும்.
உங்களுடைய மாத சம்பளத்தில் குடும்ப செலவுகள் போக குழந்தைகளின் கல்விக்கு இந்த தொகையை உங்களால் ஒதுக்க முடியுமா ?என்பதைப் பற்றி யோசித்து திட்டமிட்டு முடிவெடுங்கள்.
ஒவ்வொரு மாதமும் ரூபாய் 4000 ஒதுக்கி வைத்தீர்கள் என்றால் வருடத்தின் முடிவில் ரூபாய் 48 ஆயிரம் சேர்ந்திருக்கும் .
அதில் பள்ளி கட்டணம் ஆக ரூபாய் நாற்பதாயிரம் கட்டினால் மீதம் இருக்கும் தொகையை சீருடை, போக்குவரத்து, சுற்றுலா போன்ற இதன இதர கட்டணங்களுக்கு செலவிடலாம் .
ஒவ்வொரு ஆண்டும் எந்த மாதம் பள்ளியில் கட்டணம் செலுத்த வேண்டுமோ அந்த சமயத்தில் முதிர்ச்சி அடையும் விதமாக வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் கணக்கு ஒன்று தொடங்குங்கள்.
மாதம் தோறும் உங்கள் சம்பளம் பணம் வந்ததும் இந்த ஆர்டி கணக்கில் தானாகவே வரவு வைக்கும் படி செய்துவிட்டால் ஒரு வருடம் முடியும் போது அதை அப்படியே பள்ளியில் கட்டி விடலாம் .
பின்னர் உடனடியாக அடுத்த ஆர் டி தொடங்கி அடுத்த கல்வி ஆண்டுக்காக சேமிக்க தொடங்க வேண்டும்.
இவ்வாறு திட்டமிடுவதன் மூலம் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை பெற்றோர்கள் எளிதாக சமாளிக்க முடியும்.