மா இலையின் மகத்துவம்
மாமரத்தின் பூர்வீகம் இந்தியா தான்.
இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், மர பட்டை, வேர், பிசின் போன்ற அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது.
மா இலை சிறந்த கிருமி நாசினியாகவும், வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மா இலைக்கு உண்டு .
கொழுந்து இலையை வதக்கி தேனில் கலந்து குடிநீரில் போட்டு ஊற வைத்து அந்த நீரை அருந்தினால் குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
நீரழிவு உள்ளவர்கள் மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீருடன் கலந்து அருந்தினால் நீர் அழிவு கட்டுப்படும்.
தீக்காயம் பட்டவர்கள் மா இலையை சுட்டு சாம்பலாக்கி வெண்ணையில் குலைத்து பூசி வந்தால் தீ புண் விரைவில் குணமாகும் .
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர் விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும் .
இளம் மாவடுகளை எடுத்து காம்பு நீக்கி காய வைத்து உப்பு நீரில் போட்டு ஊற வைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும் .
வாந்தி குமட்டல் நீங்கும்.
மா பட்டையை குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அனுகாது .
மா வேர், பட்டை , வயிற்றுப்புண் , குருதி, கழிச்சல் போன்றவற்றை நீங்கும் .
கால் பித்த வெடிப்பு உள்ள பகுதியில் மாம்பழ பிசினை தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும் .
மாம்பழம் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது.
இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம் .
மாங்கொட்டை பருப்பை எடுத்து காய வைத்து பொடித்து கசாயம் செய்து மாதவிலக்கு காலத்தில் அருந்தினால் அதிக உதிரப்போக்கு கட்டுப்படும்.
வெள்ளைப்படுதல் குணமாகும்.
வயிற்று புழுக்கள் நீங்கி வயிற்றுப்புண் ஆறும் .
வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும்.
மாபருப்பை பொன்னிறமாக வறுத்து தூள் செய்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.