தட்கல் ரயில் டிக்கெட் வேண்டுமா?

தட்கல் ரயில் டிக்கெட் வேண்டுமா?
 ரயிலில் அவசரப் பயணங்களுக்கு பலரும் நம்புவது தட்கல் டிக்கெட்டை தான் .

அதை எளிதில் புக் செய்வது எப்படி?

 நேரடியாக ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கவுண்டரிலும் தக்கல் முன்பதிவு செய்யலாம் .

ஆனால் அங்கே நீண்ட வரிசையில் இருந்தால் உங்களுக்கு டிக்கெட் கிடைப்பது உறுதி இல்லை.

 இணைய வழி டிக்கெட் முன்பதிவு எளிதானது.

 ஐ ஆர் சி டி சி இணையதளம் அல்லது ஆப் மூலம் புக்கிங் செய்து வேகமாக டிக்கெட் பெற உதவும். 

இதற்கு ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் உங்களுக்கு புதிதாக கணக்கை தொடங்க வேண்டும்.

 மொபைல் போனில் ஐ ஆர் சி டி சி ஆப் டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு அதிலும் டிக்கெட்டு புக் செய்யலாம்.

 தேதிக்கு ஒரு நாள் முன்பு தக்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.

 ஏசி வசதி கொண்ட பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கு ஏசி அல்லாத பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கு முன்பதிவு ஆரம்பமாகிறது.

 கேட்டெடுக்க தக்கல் முன்பதிவு ஆப்ஷனை தேர்ந்தெடுத்து புறப்படும் மற்றும் சேரும் இடைநிலையங்கள் பயணத் தேதி ரயில் மற்றும் வகுப்பு உட்பட தேவையான அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்ப வேண்டும்.

 பிறகு பயணி விவரத்தை பதிவிட வேண்டும்.

தட்கல் புக்கிங் தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே லாகின் செய்து தயாராக இருப்பது நல்லது.

 பயணம் செய்யப் போகிறவர்களின் பெயர்கள், வயது போன்ற விவரங்களை தயாராக கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 புக்கிங் ஆரம்பித்த ஒரு நிமிடத்தில் கூட டிக்கெட் தீரும் வாய்ப்பு உள்ளது.

 கட்டணம் செலுத்த கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

 இதை விட ஜிபே போன்ற யுபிஐ வழிமுறையில் கட்டணத்தை வேகமாக செலுத்த முடியும் .

ஒரே நேரத்தில் நான்கு தடக்கல் டிக்கெட் வரை ரயில்வே கவுண்டரில் புக்கிங் செய்யலாம்.

 இதுவே ஐ ஆர் சி டி சி தளத்தில் ஒரு கணக்கை பயன்படுத்தி இரண்டு டிக்கெட் மட்டுமே எடுக்க முடியும்.

 வழக்கமான டிக்கெட்டை விட தக்கல் டிக்கெட் சற்று விலை அதிகம் .

தக்கல் ஆப்சனை பயன்படுத்தியும் புக் செய்து உறுதியான பயணச்சீட்டை ரத்து செய்ய விரும்பினால் அதற்கான கட்டணம் உங்களுக்கு திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

 பிரீமியம் தக்கல் என்ற ஒரு வசதி இருக்கிறது .

இது தக்கல் டிக்கெட்டை விட விலை அதிகம் . 
எளிதிலும் கிடைக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை