மகளிர் தினம் உருவான வரலாறு
மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம்.
ஆண்களுக்கும் , பெண்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை கலைந்து பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவது இதன் நோக்கம்.
மகளிர் தினம் தொடங்கிய காரணத்தை அறிய பின்னோக்கி செல்வோம்.
1909 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 15,000 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிக அளவுக்கு அதிக வேலை நேரம், குறைந்த வருமானம், வாக்களிக்க தகுதியில்லை போன்ற முழக்க வரிகளுடன் பெண்கள் பேரணி நடத்தினர்.
Socialist party of America என்னும் கட்சி பெண்களின் எழுச்சியை கொண்டாடியது .
அடுத்த ஆண்டு அனைத்து உலகை சோசியலிஸ்ட் கட்சி டென்மார்க்கின் கோப்பன் ஹேகன் நகரில் நடத்திய மாநாட்டில் தேசிய மகளிர் தினம் குறித்து யோசனை முன்வைக்கப்பட்டது.
17 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அதை ஆதரித்து ஒரு மனதாக வாக்களித்தனர் .
சர்வதேச அளவில் அதை கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தும் மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.
1911 ஆம் ஆண்டில் முதல் முறையாக அனைத்து உலக மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.
மார்ச் 19 அன்று நடைபெற்ற கொண்டாட்டங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் இந்த தினத்தை கொண்டாடின.
வேலை இடங்களில் நிலவும் பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வரும் முழக்கங்கள் இடம்பெற்றன .
1913 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ரஷிய பெண்கள் முதன் முறையாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.
1913 ஆம் ஆண்டு நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று பின்பற்றப்படுகிறது.