ஒரு கிலோ உப்பின் விலை ரூபாய் 35 ஆயிரம்

ஒரு கிலோ உப்பின் விலை ரூபாய் 35 ஆயிரம்
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=8dddaee9ff7ff0545f26191d97a737d5


 இன்று வரை விலை மலிவாக உள்ள மளிகை பொருட்களுள் ஒன்று உப்பு .

 ஆனால் மிகவும் விலை உயர்ந்த உப்பு இருக்கிறது .

அது கொரியா மூங்கில் உப்பு .

 இந்த உப்பை மூங்கில் உப்பு, ஊதா மூங்கில் உப்பு அல்லது ஜுகியோம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

 சரி மிகவும் விலை உயர்ந்த உப்பு என்கிறீர்களே அப்படி என்ன விலை என்று கேட்கிறீர்களா? இது ஒரு கிலோ நம்மூர் மதிப்பில் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது .

இந்த ஊதா மூங்கில் உப்பு கொரியா சமையலிலும் அந்நாட்டு பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

 இந்த உப்புக்கு ஏன் இவ்வளவு உயர்ந்த வில்லை.

 மூங்கில் தண்டுகளில் கொரியாவின் மேற்கு கடற்கரையில் இருந்து பெறப்பட்ட வளைகுடா கடல் உப்பு நிரப்பப்படுகிறது .

பின்னர் அது சிவப்பு களிமண்ணால் மூடப்பட்டு பைன் மரத்திலிருந்து பெறப்பட்ட விறகுகளால் சூளையில் சுடப்படுகிறது.

 அவ்வாறு சுட்டு உப்பு கட்டிகளாக கெட்டியானதும் அவை வெளியே எடுக்கப்பட்டு மற்றொரு மூங்கில் தங்கள் நிரப்பப்பட்டு மீண்டும் சுடப்படுகின்றன .

இந்த செயல்முறை 9 முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.

 ஒன்பதாவது முறை சுடும் போது ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பயன்படுத்தப்படுகிறது.

 இந்த பேக்கிங் செயல்முறை முடிந்ததும் மூங்கில் உப்பில் நீளம், மஞ்சள், சிவப்பு , வெள்ளை, கருப்பு படிகங்கள் காணப்படும்.

 இந்நிலையில் இந்த உப்பு காம்ரோஜங் சுவை எனப்படும் தனித்துவமான இனிப்பு சுவையை பெறுகிறது .

இவ்வாறு இந்த உப்பை தயாரிக்கும் முழு செயல்முறையும் கடும் உழைப்பு தேவைப்படுவதாகவும் , அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும் உள்ளது .

மேலும் திறமையான வேலை ஆட்கள் உப்பை சுடுவதற்கு பயன்படுத்தப்படும் சிறப்பு உலைகளை இயக்க வேண்டும்.
 இவ்வளவு உழைப்பும் தனித்துவமும் இருப்பதால்தான் இந்த உப்பின் விலை உயரத்தில் உள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை