தவிர்க்க வேண்டிய சில உணவு சேர்க்கைகள்
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் வெப்பநிலை அதிகரித்து சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில் நம்முடைய உடலை மேலும் சூடாக்குவதில் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் சில குறிப்பிட்ட உணவுகள் மற்ற உணவுகளோடு சேரும்போது நமது செரிமான அமைப்பை பாதிக்கிறது.
இதனால் மந்தமாக உணர்வோம்.
அது மட்டும் இன்றி தவறான செயற்கை உணவுகள் வயிறு உப்பசம் மற்றும் பல்வேறு செரிமான பிரச்சனைகளை வரவலிக்கும்.
எனவே கோடைகாலத்தில் ஆரோக்கியமான செரிமானத்திற்கும், உடல் நலனுக்கும் கேடு விளைவிக்கும்.
சில உணவு சேர்க்கைகளை தவிர்ப்பது நல்லது .
இது குறித்து தெரிந்து கொள்வோம் :
யோகர்ட் அல்லது சீஸ் போன்ற அதிக புரதச்சத்து உள்ள உணவுகளோடு பழங்கள் சேர்த்து சாப்பிடுவது செரிமான அழுத்தங்களுக்கு காரணமாக அமையும்.
பழங்களில் இயற்கையாக சர்க்கரை உள்ளதால் இவை உடனடியாக செரிமானம் ஆகிவிடும்.
ஆனால் புரத உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் பிடிக்கும்.
இவை இரண்டையும் ஒன்றாக செய்யும் சாப்பிடும்போது வயிறு உப்புசம் மற்றும் அசெளகரியம் ஏற்படும்.
கோடைகாலத்தில் அதிகமாக சால்ட்டுகளை எடுத்துக் கொள்வது சாதாரண விஷயமே.
இந்த சால்டின் மேல் கூடுதல் சுவைக்காக வினிகர் அல்லது சிட்ரஸ் பல ஜூஸ்களை சேர்த்து சிலர் சாப்பிடுவர்.
ஆனால் இந்த அசிட்டிக் சேர்க்கை மாவுச்சத்து உணவுகளோடு சேரும்போது செரிமானத்தை வெகுவாக பாதிக்கிறது.
கோடை காலம் வந்துவிட்டாலே தர்பூசணியின் வரத்தும் அதிகரித்து விடும் .
நீர்ச்சத்து பண்புகள் மற்றும் புத்துணர்ச்சியான சுவை காரணமாக தர்பூசணியை தண்ணீர் பழம் என்றும் கூறுவார்கள்.
எனினும் இதை பால் பொருட்களோடு சேர்த்து சாப்பிட்டால் வயிறு உப்புசம் அஜீரண கோளாறு மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் .
வெப்பத்தை தணிக்க பலரும் அதிக அளவு குளிர் பானம் அருந்துவது இயல்பே.
ஆனால் சிலருக்கு சாப்பிடும் போது இடையிடையே குளிர்பானம் அருந்தும் பழக்கம் உண்டு.
இவ்வாறு செய்வது செரிமானத்தை பெரிதும் பாதிக்கும்.
வாழைப்பழம் போன்ற இனிப்பான பழங்களோடு ஆரஞ்சு , அன்னாசி போன்ற அசிட்டிக் பலன்களை சேர்த்து சாப்பிடுவது செரிமான அசெளகரியத்தை உண்டாக்கும்.
கோடைகாலத்தில் இந்த பழங்களை உண்ண வேண்டும் என்றால் புரதச்சத்து நிறைந்த பழங்களை தனியாகவும் இது போன்ற அசிட்டிக் தன்மை நிறைந்த பழங்களை தனியாகவும் சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் வராது.