கோடைக்கு மருந்தாகும் கடலை மாவு

கோடைக்கு மருந்தாகும் கடலை மாவு

 கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

 குறிப்பாக வெயிலால் உண்டாகும் கருமை நிறம் , சர்ம வறட்சிக்கு வீட்டில் இருக்கும் கடலை மாவு கொண்டு பல சரும பலன்களை அடைய முடியும்.

 1. ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாக தடவி உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச்சு என மாறும் .

சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக சில பேருக்கு இருக்கும்.

 அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேசியல் செய்து கொண்டால் முகப்பொலிவு பெறும் . 

மேலும் இதனுடன் எலுமிச்சை சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

 2.  வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும் .

இதனை நீக்க தேங்காய் பால் ஒரு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து கலந்து பசை போல பிசைந்து முகத்தில் பூச வேண்டும்.

 உலர்ந்ததும் கழுவ வேண்டும்.

 வாரம் இரு முறை செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

3. நிறைய பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்து சிரமங்கள் கருமையாகவும், வறட்சியாகவும் இருக்கும்.

 இத்தகைய கருமையை போக்குவதற்கு கடலைமாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் கழுவி நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கருமை விரைவில் நீங்கிவிடும்.

 4. உருளைக்கிழங்கு சாறுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் பேக் செய்யும் போது பார்லரில் பேசியல் செய்தது போன்ற ஒரு பளபளப்பை கொடுக்கும் .

சோப்பிற்கு பதிலாக தினமும் கடலை மாவு பயன்படுத்தும் போது பருக்களற்ற தூய்மையான முகத்தை பெறலாம் .

5. கடலைமாவு ஒரு டேபிள் ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் அரை டேபிள் ஸ்பூன், உடன் தயிர் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் சிறிதளவு சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக மாற்றி முகத்தில் பேக் போட்டுக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பளபளப்பாக மாறும் .
வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை கூட இந்த பேங்க் போடலாம்.

 சோப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை