ஆஸ்கர் விருது
உலகில் சிறந்த திரைப்படங்களுக்கு அரிய பெரும் விருதாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருவது நமக்குத் தெரியும்.
ஆஸ்கர் விருதை போலவே அந்த விருது சிலையும் மிகவும் பிரபலம்.
அந்த சிலை 1927 ஆம் ஆண்டு செட்ரிக் கிப்பன்ஸ் என்ற கலைஞரால் உருவாக்கப்பட்டது .
ஆஸ்கர் விருது சிலை பதிமூன்றரை அங்குல உயரமும், எட்டரை பவுண்டு எடையும் கொண்டது.
1982 ஆம் ஆண்டு முதல் இந்த சிலையை அமெரிக்காவில் சிகாகோவில் இருக்கும் ஆர் எஸ் ஓன்ஸ் அண்ட் கம்பெனி என்ற நிறுவனம் தயார் செய்து கொண்டு வருகிறது.
போர்வீரன் கையில் கத்தியை பிடித்து ஊன்றி நிற்பது போல வடிவமைக்கப்பட்ட இதில் ஐந்து கோடுகள் காணப்படும் .
ஒரு நல்ல திரைப்படம் உருவாக பிரதான காரணமாக இருப்பவர்கள் இயக்குனர், நடிகர், கதை ஆசிரியர், தொழில்நுட்ப வல்லுநர், தயாரிப்பாளர் இவர்கள் அனைவரையும் குறிப்பதாக இந்த ஐந்து கோடுகள் உள்ளன.
இரண்டாம் உலகப் போர் நடந்த போது ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சில காலம் ஆஸ்கார் விருது பிளாஸ்டரால் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
பின்னர் பொருளாதார நிலை மீண்டும் எழுந்த பின்பு தங்க முலாம் பூசப்பட்டு இப்போது வரை அதேபோல வழங்கப்பட்டு வருகிறது.
ஆஸ்கர் விருது பெறுவதை சர்வதேச திரைப்பட உலகம் மிகவும் பெருமையாகவும், கௌரவமாகவும் கருதுகிறது.