காதில் எறும்பு பூச்சி புகுந்து விட்டால்

காதில் எறும்பு பூச்சி புகுந்து விட்டால்

 காதில் எறும்பு போன்றவை புகுந்து அவதியை நாம் அனைவரும் ஒருமுறையாவது அனுபவித்து இருப்போம் .

காதுக்குள் இதுபோல எறும்பு , சிறு பூச்சி புகுவது அச்சத்தையும் தொல்லையையும் தரும்.

 அதுபோன்ற நிலையில் என்ன செய்வது. இதோ ? இப்படி செய்யுங்கள்.

 காதுக்குள் பூச்சி புகுந்து விட்டால் முதலில் ஒரு இருட்டு அறைக்குள் சென்று டார்ச் அல்லது மொபைல் டைட்டில் காதில் காட்ட வேண்டும்.

 காரணம் சில பூச்சிகள் ஒளியை பார்த்து உடனே வெளியே வந்து விடும்.

 உங்கள் காதுக்குள் எறும்பு போன்றவை சென்று விட்டால் வீட்டில் ஆலிவ் அல்லது பேபி ஆகில் இருந்தால் அதன் சில துளிகளை காதுக்குள் விடலாம் .

அப்போது பூச்சிகள் காதில் இருக்க முடியாமல் அந்த எண்ணெய் உடன் சேர்ந்து வெளியே வந்துவிடும்.

 மிதமான சூட்டில் இருக்கும் நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதன் சில துளிகளை காதில் ஊற்றலாம் .

உப்பு கலந்த நீர் பூச்சிக்கு பிடிக்காது. என்பதால் அது உடனே காதிலிருந்து வெளியே வந்து விடும்.

 காதில் எறும்பு பூச்சி புகுந்து விட்டால் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் .

பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் பொருட்களை வைத்து பூச்சிகளை எடுக்க முயல வேண்டாம்.

 இப்படி செய்தால் பூச்சி மேலும் உள்ளே சென்று விடும்.

 அது மட்டுமின்றி காது ஜவ்வும் சேதம் அடையக் கூடும் .

காதுக்குள் பூச்சி சென்றால் உடனே விரலை விட்டு அதை அகற்ற முயல வேண்டாம். 

வலுக்கட்டாயமாக அவ்வாறு செய்வது வலியைத்தான் ஏற்படுத்தும் .

சிலர் காதுக்குள் பூச்சி சென்றால் தீக்குச்சியின் மருந்தில்லாதா நுனிப்பகுதியை நினைத்து அதனை எடுக்க முயற்சிப்பார்கள் ஆனால் அப்படி செய்வது தவறு.

 இதனால் காது மென்மையான உட்புறம் பாதிக்கப்படலாம்.

 தண்ணீர், எண்ணெய் ஊற்றியும் காதுக்குள் இருக்கும் .

பூச்சி வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரிடம் சென்று காண்பிப்பது தான் தீர்வு.

 குறிப்பாக குழந்தைகள் இந்த பிரச்சனைக்கு உள்ளானால் உடனே அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

 எப்போதும் வந்த பின் தவிப்பதை விட வருமுன் காப்பதே நல்லது.

 வீட்டில் சூழ்நிலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

 குறிப்பாக படுக்கையறையில் தூய்மை பேண வேண்டும் .

படுக்கை விரிப்பு, தலையணை போன்றவற்றை சுத்தமாக பராமரிப்பது அவசியம் .

உணவு தின்பண்டங்களை படுக்கையறையில் சாப்பிடவோ ? உணவு துணுக்குகளை சிந்தவும் கூடாது.

 வீட்டின் சுற்றுப்புறத்திலும் குப்பை கூலங்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும் .

பூச்சிகள் உங்கள் காதுக்குள் புகுந்து விடாமல் கவனமாக இருங்கள்.
 வெளியே செல்லும்போது குறிப்பாக இரவில் செல்லும்போது கூடிய மட்டும் காதுகளை மூடி பாதுகாத்து விடுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை