முடி உதிர்வை தடுக்க எளிய வழிகள்

முடி உதிர்வை தடுக்க எளிய வழிகள்

 முடி உதிர்தல் என்பது பலரும் சந்திக்கும் பிரச்சனை .

அதற்கு பல காரணங்கள் உண்டு.

 எதனால் முடி கொட்டுகிறது என்று தெரிந்து அதற்கான தீர்வை தேர்ந்தெடுப்பதே சரியான பலன் தரும்.

 முடி உதிர்வதற்கு பொதுவான காரணங்கள்: பொடுகு, அதிக வியர்வை, அழுக்கு, மனசோர்வு , மன உளைச்சல், போசாக்கு இன்மை, எண்ணை தேய்த்து குளிக்காது இருத்தல், புழுவெட்டு, ஹார்மோன் பிரச்சனை, தோல் நோய்கள் இவற்றில் எந்த காரணத்தால் முடி உதிர்கிறது என்பதை கவனித்து அதை சரி செய்ய வேண்டும் .

அது போன்று வாழ்வியல் முறை மாறுபாட்டாலும், உணவில் செய்யும் தவறுகளாலும் கூட முடி உதிர்வு ஏற்படும்.

 நாம் உண்ணும் உணவில் இரும்புச்சத்து , சுண்ணாம்பு சத்து குறைந்தால் முடி உதிர ஆரம்பிக்கும்.

 இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்துள்ள பழங்களை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 வாரம் இரண்டு முறை எல்லா வகை கீரை, முளை கட்டிய பயிறுகள், சாலட், ஜூஸ் நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு முடி கொட்டாமல் காக்க உதவும் .

முடி உதிர்வை தடுக்க அடர்த்தியாக வளர 

தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் ஈ ஆயில் 10 /3 என்ற பங்கு அளவில் கலந்து பூசி வர முடி வளர்ச்சி அடையும்.

 தேங்காய் பாலுடன் பச்சையான கற்பூரவள்ளி இலை சேர்த்து வெயிலில் காயவைத்து முடியில் பூசினால் முடி அடர்த்தியாக வளரும்.

 கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இரண்டையும் அரைத்து உலர செய்து பிறகு எண்ணெயில் கலந்து காயவைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் சூட்டு தணித்து குளுமை அடைய, முடியும் உதிராது.

 முட்டையின் வெள்ளை கரு, வால் மிளகு இரண்டையும் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி வேருடன் கொட்டுவதை தடுக்கும்.

 காய்ந்த செம்பருத்தி பூ, ஆவாரம்பூ, மருதாணி பூ எல்லாவற்றையும் வெயில் படாமல் நிழலில் உலர்த்தி சிறு துணியில் கட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு உபயோகித்து வந்தால் கடுமையான வெயில் காலத்தில் ஏற்படும் முடி உதிர்வதை தடுத்து மூல சூடு அடங்கும்.

 வேப்பம்பூ , மருந்தாணி பூ இரண்டையும் வெயில் படாமல் காய வைத்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலைக்கு தேய்த்துவர வெப்பத்தால் தலையில் ஏற்படும் பருக்கள் மற்றும் கட்டிகள் மறையும்.
 வாரம் இரு முறை எண்ணெய் குளியல் எடுத்து வர முடி உதிர்வு நிற்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை