புத்துணர்ச்சி தரும் சீரகத் தண்ணீர்

புத்துணர்ச்சி தரும் சீரகத் தண்ணீர்

 நம் வீட்டில் அஞ்சரை பெட்டியில் எவ்வளவு பெரிய மருத்துவம் ஒளிந்து இருக்கிறது .

சீரகம், இது உடலை எப்படி சீராக வைத்திருக்க நமக்கு உதவுகிறது.

 அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்:

 வெறும் வயிற்றில் சிறுநீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.

 மேலும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.

 தண்ணீரில் சிறிது சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது .

அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.

 வயிற்று வலிக்கும் தீர்வு தரும்.

 செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும்.

 சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

 நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியதுஅவசியம்.

 உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும்.

 மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கும்.

 சிறுநீரக சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும்.

 சளியை குணப்படுத்தவும் உதவும்.

 சிறுநீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது .

அது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது .

வளர்ச்சி மாற்றத்துக்கும் வலு சேர்க்கும் .

சீரக நீர் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவிகிறது மற்றும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும்.

 கல்லீரலும் வளம் பெறும் .

சருமம் பளபளப்புக்கு சீரக நீரை பயன்படுத்தலாம் .

அதில் பொட்டாசியம் மட்டும் இன்றி கால்சியம், செலினியம், மாங்கனிஸ் உள்ளிட்டவை இருக்கின்றன.

 இவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

 சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் ரத்த சோகையை குணப்படுத்தும்.

 சளி பிரச்சனை, சுவாச குழாயில் உள்ள நோய்க்கிருமிகள் அழிந்து சளி மற்றும் இருமல் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் .

தொடர்ந்து இந்த நீரை குடித்து வருவதால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யலாம் .

சிரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும். சரும மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

 சீரகத்தில் உள்ள வைட்டமின் ஈ சத்து இளமையை தக்க வைக்க உதவும்.
 இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு முடியின் வேர்கள் வளர்வதற்கும் உதவும் முடி உதிர்தலை தடுக்கும்.

4 கருத்துகள்

  1. பயனுள்ள குறிப்பு

    பதிலளிநீக்கு
  2. நான் அதிகமாக சீரக தண்ணி குடிப்பேன்.. எனது உடல் ரீதியான பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது

    பதிலளிநீக்கு
புதியது பழையவை