கீரை மருத்துவம்

கீரை மருத்துவம் 
பருப்பு கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.

 புளிச்சக்கீரை உடன் பார்லி சேர்த்து கஞ்சி காய்ச்சி கொடுத்தால் கால் வீக்கம் குணமாகும்.

 தூதுவளைக் கீரையை காய வைத்து பொடியாக்கி நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் காது தொடர்பான நோய்கள் குணமாகும் .

கரிசலாங்கண்ணி கீரையை மிளகு சேர்த்து அவித்து சாப்பிட்டால் ரத்த சோகை நீங்கும் .

உலர்ந்த புதினா இலையில் கசாயம் செய்து குடித்தால் விக்கல், வயிற்று வலி போன்றவை தீரும் .

பருப்புக் கீரையை அரைத்து தீ புண்கள் மீது தடவினால் காயம் விரைவில் ஆறும் .

பசலை கீரை உடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் தீராத தாகம் தீரும் .

முருங்கைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் உடல் சூடு தணியும் .
மணத்தக்காளி கீரையோடு பூண்டு நான்கு பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அவித்து சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை