ரோஜாப்பூ
ரோஜா இதழிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர் கண்களில் உள்ள எரிச்சல் தன்மையை நீக்கும்.
ரோஜா இதழ், இஞ்சி, புளி, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிட்டு வர உடல் சூடு தொடர்பான நோய்கள் குணமாகும்.
சுக்கு மல்லி, காப்பியுடன் ரோஜா இதழ்களை சேர்த்து அருந்தினால் செரிமான கோளாறுகளும், தலைசுற்றல் மயக்கம் அது தொடர்பான கோளாறுகள் நீங்கும்.
ரோஜா இதழ் உடலுக்கு வலிமை மற்றும் குளிர்ச்சி அளிக்கும் .
ரோஜா பூ கசாயத்தில் பசும்பால், சர்க்கரை சேர்த்து பருகி வந்தால் பித்த நீர் மிகுதியால் வரும் மயக்கம் , வாய் கசப்பு, நெஞ்சு எரிச்சல் நீங்கிவிடும் .
ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு காலை மாலை மென்று சாப்பிட வயிற்று கடுப்பு குணமாகும்.
வாய்ப்புண் குடல்புண் ஆறும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நீங்கும் .
கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீர் எளிதாக பிரியும்.
ரோஜா பூ இதழ்களுடன் துவரம் பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் சூடு சமநிலைப்படும். உடல் பலத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும்.