இரவு உணவுக்கு பின் செய்யக்கூடாதவை
பொதுவாக சிலர் உணவு உண்ட உடன் தூங்குவார்கள் .
சிலர் குளிப்பார்கள்.
இன்னும் சிலர் புகை பிடிப்பார்கள். சிலர் உண்ட உணவு செரிமானமாகும் என நினைத்து நடப்பார்கள் .இவை எல்லாம் இரவு உணவுக்கு பின் செய்யக்கூடாத தவறுகள் ஆகும் .
நடை பயிற்சி
இரவு உணவு சாப்பிட்டவுடன் சிலர் நடப்பார்கள்.
இப்படி செய்வது உடல் நலத்திற்கு நல்லது என்று கூறுவார்கள்.
ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை .
ஏனெனில் சாப்பிட்ட உடனே நடை பயிற்சி செய்தால் கை கால்களுக்கு ரத்தம் செல்லும் .
அது செரிமானத்தை குறைக்கும்.
எனவே சாப்பிட்ட உடனே நடக்கக் கூடாது.
ஒரு மணி நேரம் கழித்து நடக்கலாம்.
பழங்கள் சாப்பிடுவது
இரவு உணவு சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
இப்படி பழங்கள் சாப்பிடுவதால் வயிறு வீங்கிவிடும்.
வாயு பிரச்சனைகள் ஏற்படும் .
சாப்பாடு சரியாக ஜீரணமாகாது.
அதிக தண்ணீர் குடிப்பது
நம் உடலுக்கு தண்ணீர் தேவை தான்.
ஆனால் அதை சரியான நேரத்தில் குடிக்க வேண்டும்.
குறிப்பாக இரவு இரவு உணவுக்கு பிறகு தண்ணீரை 30 நிமிடங்கள் கழித்து குடிக்க வேண்டும் .
அந்த நீர் செரிமான அமைப்பின் வேலையை தடுக்கும் .
இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் .
டீ, காபி குடிக்க கூடாது
நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் இரவு உணவுக்கு பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடித்தால் செரிமானம் பாதிக்கப்படும்.
வாயு அமிலத்தன்மைகள் ஏற்படும்.
உணவில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்காது.
இரும்பு சத்து குடலால் உறிஞ்சப்படாது.
எனவே சாப்பிட்டு உடன் டீ காபி குடிக்க கூடாது .
குளிக்க கூடாது
சாப்பிட்ட உடனேயே குளித்தால் உடலின் மற்ற பாகங்களுக்கு செல்லும் ரத்த செரிமானம் பாதிக்கப்படும்.
செரிமான மண்டலத்துக்கு ரத்தம் சரியாகப் போவதில்லை .
இதனால் செரிமானம் சீராக நடைபெறாது .
புகை பிடித்தல்
புகைபிடித்தல் உடலுக்கு தீங்கானது.
அதேவேளை இரவு உணவுக்கு பிறகு உடனடியாக புகை பிடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும்.
இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
இரவு உணவுக்குப் பிறகு புகை பிடிப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.