பனங்கற்கண்டு மருத்துவ பயன்கள்

பனங்கற்கண்டு மருத்துவ பயன்கள் 
இதில் சுண்ணாம்பு சத்து, இரும்பு, சாம்பல், புரதச்சத்துக்கள் மல்டி விட்டமின்களான துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.

 பாலில் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வர மார்புச்சளி நீங்கும் .

பனங்கற்கண்டு சுவைத்து உமிழ்நீரை சிறுக சிறுக விழுங்கி வர வாய் துர்நாற்றம், தொண்டைப்புண், வலி இவை நீங்கும்.

 உடல் உஷ்ணம், நீர் சுருக்கு காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

 இதில் இருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

 கருவுற்ற பெண்களுக்கும் , மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை தருகிறது.

 இதை பானமாக அருந்துவதால் இதய நோய் குணமாகும்.

 இதயம் வலுவடையும்.

 இதில் இருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

 ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரகக் கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.
 கோடை வெயிலின் கொடுமைகளை தவிர்க்க இளநீருடன் பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து பானமாக அருந்தி வருவது சிறப்பு.

கருத்துரையிடுக

புதியது பழையவை