கிரைண்டர் பராமரிப்பு
வெட் கிரைண்டரில் உலர்ந்த பொருட்களை அரைக்க கூடாது .
அப்படி செய்தால் கல் தேய்த்து விடும்.
அரைத்த பின் நன்றாக கழுவி ஈரம் போக துடைத்து வைக்க வேண்டும்.
சுத்தமான துணியை கொண்டு அல்லது மூடியை கொண்டு மூடி வைக்க வேண்டும் .
கிரைண்டரை அழுக்குத் துணி போடுகிற கூடையாகவோ ? குழந்தைகளின் விளையாட்டு பொருட்களை போடும் இடமாகவோ ? பயன்படுத்தக் கூடாது .
சுத்தமாக மாவு போக கழுவாவிட்டால் கரப்பான் பூச்சிகள் சேரும்.
கிரைண்டர் ஓடும்போது கீழே எக்காரணம் கொண்டும் கையை உள்ளே கொண்டு போக கூடாது.
குலவியின் கைப்பிடியில் தண்ணீர் படாமல் வைத்திருப்பது நல்லது. இல்லை என்றால் கைப்பிடி தனியே வந்துவிடும் .
கிரைண்டருக்கு செல்லும் ஒயரில் எலி ஏதாவது கடித்திருக்கிறதா? என்று அடிக்கடி சரி பார்த்துக் கொள்ள வேண்டும் .
மாவு அரைக்கும் போது தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இல்லை என்றால் மாவு கெட்டியாகி காயலில் பாதிப்பு ஏற்படும்.
கிரைண்டரை தரையில் வைக்க கூடாது .ஸ்டாண்டின் மீது தான் வைக்க வேண்டும் .
மாவு எடுக்க சுலபமாக இருக்கும்.
அதிகம் குனிய தேவையில்லை.
எளிதில் துடைக்கலாம் .
மாவை தள்ளும் கைப்பலகையை சரியாக மாட்ட வேண்டும் .அது லூசாக இருந்தால் மாவு அறைய லேட் ஆகும்.
மாவு தள்ளும் பலகையையும், குளவியை நிறுத்தும் .
ஸ்டாண்டையும் ஈரம் படாமல் துடைத்து வைக்க வேண்டும்.
குளவியை செங்குத்தாக வைத்து தான் கழுவ வேண்டும் .
பக்கவாட்டில் போட்டு கழுவினால் பேரிங் பழுதாகிவிடும்.
கைப்பிடி தனியே வந்துவிடும் .
மாவு அரைக்க ஆரம்பிக்கும் முன்பே குலவிகள் செய்து பொருத்தப்பட்டு அதற்கான கொக்கியில் நல்ல விதமாக மாற்றப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.
கிரைண்டரில் அரிசி பருப்பை மொத்தமாக கொட்டாமல் ஓட ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக கொட்டுவது நல்லது.
அவ்வப்போது மிஷினில் உள்ள ஸ்குரு போல்டுகளை சரி பார்த்து ஓட்ட வேண்டும் .
மிஷின் மீதும் உள்ளே மோட்டர் மீதும் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .
இரண்டு வருடத்துக்கு ஒரு முறையாவது கிரைண்டரை சுற்ற வைக்கும் ஃபேன் பெல்ட்டை மாற்றுவது நல்லது.