வீட்டுப் பொருட்கள் பராமரிப்பு

வீட்டுப் பொருட்கள் பராமரிப்பு 

வெள்ளி பொருட்களுக்கு பற்பசை தடவி பின்பு தேய்த்து விட்டால் பாலிஷ் போட்டது போல் பளிச்சென்று இருக்கும்.

 மேலும் வெள்ளி பாத்திரங்களை கழுவும் தண்ணீரில் சிறிதளவு பாலை சேர்த்துக் கொண்டால் பாத்திரங்கள் பளபளக்கும்.

 தாமிரம் மற்றும் பித்தளை பாத்திரங்கள் மேல் படிந்திருக்கும் பச்சை நிறத்தை போக்க வினிகரையும் உப்பையும் கலந்து நன்கு தேய்த்து கழுவினால் போய்விடும் .

திரைச்சீலை மாட்டும் பித்தளை வளையங்களை வினிகர் கலந்த நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்தால் பளபளப்பாகிவிடும் .

கண்ணாடி பொருட்களை கழுவும் போது தண்ணீரில் சிறிதளவு நீலத்தைக் கலந்து கழுவி விட்டால் பின்னர் வெந்நீரில் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.

 குளிர்காலங்களில் முகம் பார்க்கும் கண்ணாடியில் புகை படிந்தது போன்று இருப்பதை சோப்பு தண்ணீரை நன்கு தடவி பின்பு மெல்லிய துணி அல்லது மெல்லிய டிஷ்யூ மற்றும் செய்தித்தாளினால் துடைத்தால் கண்ணாடி ஜன்னல்கள் பளபளப்பாகும்.

 தோல்பட்டிகள் , பர்ஸ் போன்றவைகளின் மேல் சிறிதளவு எலுமிச்சை சாறு துணி கொண்டு நன்கு தைத்தால் புதிது போல் மின்னும்.

 வாஷ்பேஷனில் ஏற்படும் மஞ்சள் நிற கரைகளை எலுமிச்சை சாறு வினிகரை கொண்டு தேய்த்தால் வெண்மையாக காட்சியளிக்கும்.

 பாத்திரங்கள் கழுவும் நீரில் சிறிதளவு வினிகரை கலந்து கொண்டால் பாத்திரங்கள் மின்னும் .

கைகளும் சொரசொரப்பு ஆகாமல் மென்மையாக இருக்கும்.

 சோப்பு பெட்டியில் ஒரு துண்டு ஸ்பான்சை வைத்து விடாமல் வைத்து விட்டால் சோப்பு கரையாமல் மீண்டும் நாட்கள் வரும் புத்தகங்களின் மேல் எண்ணை கரை பட்டால் அந்த இடத்தில் இரண்டு பக்கமும் டால்கம் பவுடரை தெளித்து பின்பு மெல்லிய துணியால் துடைத்தால் கரை மறைந்துவிடும்.

 உலோகங்களின் மேல் உள்ள துருவைப் போக்க பேனா மையினால் துடைத்தால் போய்விடும்.

 மர ஜாமான்கள் பள பளக்க மண்ணெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் சமமாக கலந்து அதில் மெல்லிய துணியை நனைத்து துடைத்தால் போதும்.
 தர்மாஸ் பிளாஸ்கின் உள்ளே உள்ள கறைகளைப் போக்க வாஷிங் சோடா உடன் தண்ணீர் கலந்து ஊற்றி குலுக்கி கழுவினால் போதும் கரைகள் நீங்கிவிடும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை