விழிகளுக்கு அழகு ஊட்டும் மை
கண்ணாடி அணியும் பெண்கள் மை கோடுகளை சற்று பட்டையாக தீட்ட வேண்டும். இல்லையெனில் கண்ணாடி கண்களில் மை தீட்டி இருப்பதை மறைத்து விடும்.
கண்களுக்கு மை திட்டுவதற்கு முன் கண்களை நன்றாக கழுவி பிறகு மையிட வேண்டும்.
மை இட்டுக்கொள்ள மெல்லிய பிரசுகளை பயன்படுத்தலாம் .
கண்கள் மீன் போன்ற அமைப்பு பெற வேண்டும் என்றால் கண்களின் முனையில் கோடு இழுத்தால் அழகாக இருக்கும்.
கண் இமைகளை அழகுப்படுத்துவதற்கு மஸ்காராவை பயன்படுத்தலாம்.
மஸ்காராவை சிறிதளவு எடுத்து கண்களின் மேல் இமையில் மீது அடியிலிருந்து மேல் பக்கமாக தடவ வேண்டும்.
மெல்லிய முடிகளைக் கொண்ட கண் இமைகள் கவர்ச்சியாக தோற்றமளிக்கும் .
ஐ- ஷேடாேசை அணியும் ஆடைகளுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பிரஸ்ஸின் உதவியுடன் பயன்படுத்த வேண்டும் .
மேல் கண் இமையில் ஒரு விரலில் இருந்தோ அல்லது இடையாக உள்ள முடிகளின் அடியிலிருந்து கண் இமையில் மேல் நோக்கி பூச வேண்டும்.
கண் இமைகளில் தோன்றும் சுருக்கங்கள் மறைந்து பொலிவான தோற்றம் அளிக்கும்.
ஐ லைனர் இமையும் ஓரமாக இமைகளின் மயிர் கால்களை ஒட்டி மெல்லிய கோடு போல் தீட்டிக் கொண்டால் எடுப்பாக இருக்கும்.
ஐ ப்ரோ பென்சிலால் புருவங்கள் வளைந்து வில் போல அழகாக காட்சியளிக்கும் படி வளைவாக திட்டிக் கொள்ள வேண்டும்.
புருவத்தில் வளர்ந்துள்ள ரோமங்களை மேல்நோக்கிய வண்ணம் பிரஸ் செய்து கொண்டால் புருவங்களை அழகுப்படுத்தி காட்டும்.