எலுமிச்சை கனி

எலுமிச்சை கனி 
எலுமிச்சை கனி ஒரு அதிசயக்கனி.

 எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய இந்த கனியின் இலை, காய், பூ அனைத்திலும் பல மருத்துவ குணம் உள்ளது.

 உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை, நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சை சாறு அருந்தலாம்.

 வயிற்று வலி , வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும்.

 எலும்புச்சையின் கொழுந்தான இலைகளைப் பறித்து அதன் உடன் கொத்தமல்லி இலை, கருவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டால் பித்த வாந்தி, ஜீரண குறைபாடு, வாய்வு பிடிப்பு குணமாகும் .

எலுமிச்சை இலையை அரைத்து மூட்டு வலி, கெண்டைக்கால் வலி ஆகியவற்றிற்கு பற்று போட்டால் உடனே வலி மறைந்துவிடும்.

 எலுமிச்சை இலையை அரைத்து நெற்றி பொட்டில் பற்று போட்டால் தலைவலி பறந்து போகும் .

எலுமிச்சம் பூவை மைய போல அரைத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு , உப்பு கலந்து காலை மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் பல் வலி, ஈரு சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

 விதை முற்றாத எலுமிச்சை பிஞ்சை ஊறுகாயாக தயாரித்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.

 ரத்த மூல நோயும் குணமாகும்.

 எலுமிச்சங்காயை ஊறுகாயாக தயாரித்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் பித்தம் தணியும் .

வயிறு தொடர்பான நோய்கள் குறையும்.

 ஒரு மேசை கரண்டி எலுமிச்சம் பழச்சாற்றில் ஆறு பங்கு வெந்நீர் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்புடன் திகழும்.

 எலுமிச்சம் பழச்சாற்றுடன் கிளசரின் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் புண்கள் ஏற்பட்டிருந்தால் குணமாகும்.

 எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் இந்த இந்து உப்பை தூவி வாயில் இட்டு சுவைத்தால் மூல வியாதி நீங்கும் .

கலைப்பை நீக்க ஒரு எலுமிச்சை பழச்சாற்றை எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடனடி தெம்பு ஏற்படும் .
பூச்சி கடியால் தோலில் அரிப்பு ஏற்பட்டால் எலுமிச்சம் பழத்தை சிறிதாக நறுக்கி கடிபட்டு எடுத்து தடவினால் பூச்சிக்கடியால் ஏற்பட்ட அலர்ஜி குறையும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை