கேஸ் அடுப்பை பராமரிப்பது எப்படி?
சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.
அடுப்பை அணைக்கும் போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவிட்டு பிறகு அடுப்பில் வால்வை மூடுவது நல்லது.
அடுப்பு எப்போதும் தரைமட்டத்தில் இருந்து ஏறத்தாழ 2 அடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.
அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது கவன குறைவாக இருக்கக் கூடாது.
கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருட்கள் அடுப்பை அணைத்து வெளிவரும் எரிவாயினால் வாயு காசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படலாம்.
அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடியப் பிறகு சிலிண்டரை மாற்ற வேண்டும் .
சுய ரிப்பேர் செய்வது ஆபத்தானது. யாரையும் கேஸ் உபகரணங்களை பழுது பார்க்க அனுமதிக்க கூடாது.
விற்பனையாளரிடமே இந்த பொறுப்பை விட்டு விட வேண்டும்.
ரப்பர் குழாயில் வெடிப்பு துளை இருக்கிறதா? என்பதை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
கேஸ் சிலிண்டரிலோ ? ரப்பர் குழாயிலோ ? கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாக கதவுகள் ஜன்னல்கள் அனைத்தும் திறந்து விட வேண்டும்.
எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க வேண்டும்.
சிலிண்டர் உடன் இணைத்து இருக்கும் சிலிண்டர் வால்வை மூட வேண்டும்.
இது வால்வில் இருந்து கேஸ் கசிவதை தடுக்கும் .
பர்னரை 10 நிமிடம் மண்ணெண்ணையில் ஊற வைத்து பிறகு பழைய டூத் பிரஸ் மூலம் சுத்தம் செய்யலாம்.
சிறிதளவு நீரில் உப்பை கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதை கொண்டு கேஸ் அடுப்பை துடைத்தால் எளிதாக சுத்தமாகி பளிச்சென்று தோன்றும்.
சில சமயம் எண்ணெய் காய வைக்கும் போது அதில் தண்ணீர் சிந்தி இருந்தால் தீ பற்றி விடும்.
அடுப்பை சட்டென அணைத்து எரியக்கூடிய பொருட்களை மட்டும் அகற்றிவிட்டு தள்ளி போட வேண்டும்.
அதில் உள்ள தண்ணீர் தானாகவே எரிந்து அணைந்து விட வேண்டும்.
தீ பெரியதாக இருந்தால் மேலே மணலை கொட்டலாம்.
இரவில் படுக்கப் போகும் முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் சரியாக மூடி இருக்கிறதா? என கவனித்து செல்லவும்.