பாகற்காய்
பாகற்காயில் மிதி பாகல், கொடி பாகல் என இரண்டு வகைகள் உள்ளன.
இரண்டும் ஒரே மாதிரியான பலன்களை தருகின்றன .
பாகற்காய் வயிற்றில் உருவாகும் பூச்சிகளை அழித்துவிடும் .
குடல் புழுக்களை நீங்க வைக்கும்.
வயிற்றுப் புண்களை ஆற்றும்.
கல்லீரல், கண் நோய், பக்கவாதம் ஆகிய நோய்களை கட்டுக்குள் வைக்கும் .
தினமும் பாகற்காய் சாற்றோடு சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வர ரத்தம் சுத்தமாகும் .
சொறி சிரங்கு இருந்தால் ஆறிவிடும்.
பாகற்காய் சாறு தேன் சிறிது கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, ரத்த சோகை, காச நோய் கட்டுக்குள் வரும்.நிவாரணம் கிடைக்கும்.
பாகற்காய் சாற்றுடன் சிறிது வெந்தயம் சேர்த்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
இதை வில்லைகளாக நறுக்கி காய வைத்து பொடித்து பாலில் கலந்து சாப்பிட்டால் நீரழிவு பெருமளவு கட்டுப்படும் .
பாகற்காய் கசப்பு சுவையாக இருப்பதால் அவை சுவையாக மாற்ற சில டிப்ஸ்:
பொறியியல் கூட்டு போன்றவற்றில் தேங்காய் துருவல், கேரட் துருவல், வெல்லம் சேர்த்தால் கசப்பு தெரியாது.
சுவை கூடும்.
பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி, பிசறி சற்று நேரத்தில் எடுத்துப் பொழிந்தால் கசப்பு சுவை போய்விடும். பிறகு சமைக்கலாம்.
நறுக்கி மோரில் உப்பு சேர்த்து ஊற வைத்து காயவைத்தால் சுவையான பாகற்காய் வற்றல் தயார் .
சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது கடலை மாவு, அரிசி மாவு, தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து போண்டாவாகவோ, பக்கவாடாகவோ செய்யலாம்.
மற்ற ஊறுகாய்கள் செய்வது போன்றே பாகற்காயிலும் ஊறுகாய் செய்யலாம்.
பல மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயை விதவிதமாக சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.