பெண்களுக்கு தனிப்பட்ட வங்கி கணக்கு அவசியம்

பெண்களுக்கு தனிப்பட்ட வங்கி கணக்கு அவசியம்

நம் நாட்டில் பெரும்பாலும் பெண்கள் தங்களுக்கென தனியாக வங்கி கணக்கோ ? பண சேமிப்பு கணக்கோ ? வைத்துக் கொள்வதில்லை .

சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு மூலம் 100 இல் அறுபது சதவிகித பெண்கள் சேமிப்பு கணக்கு வைத்திருப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது .

20% பெண்களின் சேமிப்பு கணக்கை அவர்களின் குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர் .

மேலும் சில பெண்கள் குடும்பத்தினருக்காக கடன் உதவி மற்றும் மானியம் பெறுவதற்காக மட்டும் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வருகின்றனர் .

20% பேர் குடும்ப உறுப்பினர் அல்லது வாழ்க்கைத் துணை உடன் இணைந்த சேமிப்பு கணக்கை மட்டும் வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது .

தனது கட்டுப்பாட்டிலோ தனது மேற்பார்வையிலோ அல்லது சுய பயன்பாட்டுக்காகவோ தனியாக வங்கிக் கணக்கை பல இல்லத்தரசிகள் பயன்படுத்துவதில்லை .

சுயமாக சம்பாதிக்கும் பல பெண்கள் தங்களுடைய வங்கி கணக்கையும், ஏடிஎம் அட்டைகளையும் தனது வாழ்க்கைத் துணை இடம் ஒப்படைத்து விடுகின்றனர் .

ஒவ்வொரு இல்லத்தரசிகளும் குறைந்த பட்சம் 3 வங்கி கணக்குகளை வைத்திருக்க வேண்டும் என்று நிதி ஆலோசகர் அறிவுறுத்துகிறார் .

முதல் கணக்கு வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலான ஜாயின் வங்கி கணக்கு. இதில் செலுத்தும் பணம் பணத்தை உணவு மற்றும் வீட்டின் வாடகை அல்லது பராமரிப்பு செலவு மின் கட்டணம் சமையல் எரிவாயு போன்ற வாழ்வியல் அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

 இரண்டாவது கணக்கு குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலான சேமிப்பு கணக்கு. 

இந்த வங்கி கணக்கை சேமிப்பிற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.

 குழந்தைகளின் படிப்பு , மருத்துவ செலவு ,கடன், தவணை வீடு அல்லது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குதல், பயணம், குழந்தைகளுக்கான திருமண செலவு போன்ற எதிர்கால தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் .

இதில் இந்த கணக்கில் தினசரி பண பரிவர்த்தனையை நிகழ்த்தக் கூடாது.

 மூன்றாவது கணக்கு தனிநபர் கணக்கு உங்களுடைய பயன்பாட்டுக்கு மட்டும் இந்த வங்கி கணக்கை பயன்படுத்த வேண்டும்.

 இந்த வங்கிக் கணக்கை குழந்தைகள், வாழ்க்கைத் துணை பெரியவர்கள் என எவரின் கட்டுப்பாட்டின் கீழும் மேற்பார்வையிலும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

 உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மட்டும் சேமிக்கப்படும் வங்கி கணக்காக இதை பயன்படுத்தலாம் .

உங்களுடைய எதிர்கால திட்டங்களுக்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 இதுபோன்ற தனிநபர் விஷயங்களை பகிர்ந்து கொள்ள மற்றவர் உங்களை கட்டாயப்படுத்துவது நம்பிக்கையின்மையை பிரதிபலிப்பதாகும் .
இன்றைய காலகட்டத்திற்கு நிதி சார்ந்த நடவடிக்கைகளில் இது போன்ற மாற்றங்கள் அவசியமானது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை