கண் கருவளையம் பிரச்சனையா?
உருளைக்கிழங்கு தோல் நீக்கி விழுதாக அரைத்து அதன் சாரை எடுத்து தடவினால் கண் கருவளையம் நீங்குவதோடு கருமை நீங்கி சருமம் பளபளப்பாகும்.
கற்றாழை ஜெல் எடுத்து கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்தாலும் நீங்கும் .
குளிப்பதற்கு முன் சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்துவர கண்களின் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியான சருமம் பெறுவதோடு கருவளையமும் மறையும்.
வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் சோர்வு நீங்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் சருமத்தில் சேரும் கருமை நீங்கும்.
தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் இவற்றை நன்கு பேஸ்ட் ஆக்கி தினமும் கண்களின் கீழ் பகுதியில் பூசி 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவி வந்தால் இரண்டு மாதங்களில் கருவளையம் மறையும்.
பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து பேஸ்ட் செய்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கும்.
கேரட்டை சாறு எடுத்து தடவி வந்தாலும் கருமை நிறம் மாறும்.
அவித்த முட்டையை வட்ட வடிவில் வெட்டி கண்களில் வைத்து ஒரு ரிப்பன் அல்லது துணியால் கட்டிக்கொண்டு 30 நிமிடங்கள் வரை காத்திருந்து எடுக்க முட்டை உடல் சூட்டை அப்படியே உட்கிரசித்துக் கொள்ளும்.
இதனால் கண்களுடன் இணைந்து உடலும் குளிர்ச்சி அடையும்.
குறைந்தது ஆறு மணி நேரம் நல்ல தூக்கமும் உடல் நிறைய தண்ணீரில் இருந்து பழக்கமும் கூட கருவளை பிரச்சினையை சரி செய்யும் .
கணினி, மொபைல் என மணி கணக்கில் பயன்படுத்துவோர் அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுப்பதோடு கண்களுக்கான சில பயிற்சிகளையும் கொடுக்கலாம்.