உப்பு மிளகு தூள் எலுமிச்சை சாற்றின் நன்மைகள்

உப்பு மிளகு தூள் எலுமிச்சை சாற்றின் நன்மைகள் 

மூக்கடைப்புக்கு வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறினை சேர்த்து கலந்து குடிப்பதால் உடலினுள் நுட்பம் தூண்டப்பட்டு சுவாச குழாய்களில் உள்ள அலர்ஜி நீக்கப்பட்டு மூக்கடைப்பிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 தொண்டைப்புண், தொண்டைப்புண் அல்லது தொண்டை கரகரப்பு இருக்கும்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறினை கலந்து குடிப்பதால் அதில் உள்ள நோய் எதிர்ப்பு அலர்ஜி மற்றும் ஆன்ட்டி பாக்டரியல் தன்மையினால் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 பித்த கற்கள் இருப்பதால் இருப்பவர்கள் உப்பு மிளகு தூள் எலுமிச்சையுடன் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் பித்த கற்கள் கரையும் எடை குறையும்.

 நாள்தோறும் காலையில் சுடுநீரில் அரை தேக்கரண்டி உப்பு ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள் சிறிது எலுமிச்சை சாறுகலந்து குடித்து வந்தால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து கொழுப்புகளை கரைக்கும் செயல் வேகப்படுத்தப்பட்டு உடல் எடையும் வேகமாக குறைய தொடங்கும்.

 பல் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த கலவையால் நாள்தோறும் வாயை கொப்பளித்து வந்தால் அதில் உள்ள நோய் எதிர்ப்பு அலர்ஜி தன்மை கிருமிகளை அழித்து பல் வலியிலிருந்து நிவாரணம் தரும்.

 காய்ச்சல் இருக்கும் போது சுடுநீரில் உப்பு, மிளகு தூள், எலுமிச்சையுடன் தேன் சேர்ந்து கலந்து குடித்து வர உடலை தாக்கிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரித்து காய்ச்சலில் இருந்து விரைவில் குணமாகலாம் .

 உப்பு மற்றும் மிளகுத்தூள் வயிற்றில் உள்ள அமிலங்களை நீர்க்கச் செய்யும் .
மொத்தத்தில் இந்த கலவையை எடுத்து வர வயிற்றுப் பிரச்சனைகள் தடுக்கப்படும்

கருத்துரையிடுக

புதியது பழையவை