பதற்றம் தணிந்தால்....
தலைவலி, இரத்த அழுத்தம், செரிமானமின்மை மற்றும் இதர வயிற்றுப் பிரச்சனைகள், மனக்குழப்பம் போன்றவையுடன் பதற்றமும், கோபமும் எப்போதும் சேர்ந்தே வரும்.
இரண்டும் சேர்ந்து வாழ்க்கையை குழப்பத்தின் எல்லைக்கு கொண்டு போயி நிம்மதிக்கு உலை வைத்து விடும் .
பதற்றம் இன்றி வாழ விரும்புகிறவர்கள் பயத்தில் இருந்து அகன்று எதையும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி, வீடு, அலுவலகம் எங்கே என்றாலும் உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்யுங்கள்.
மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.
காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்பு நின்று கொண்டு இன்று முழுவதும் நான் அமைதியாக செயல்படுவேன் என்று திரும்பத் திரும்ப அதை உங்கள் ஆழ்மனதில் பதிவு செய்யுங்கள்.
அடுத்தவர்களின் பிரச்சனைகளில் போய் உங்கள் மூக்கை நுழைக்காதீர்கள்.
மற்றவர்களை குறை சொல்வதையும் தவிர்த்து விடுங்கள்.
மற்றவர்களை நீங்கள் புரிந்து கொள்ள தொடங்கி விட்டாலே உங்கள் பதற்றத்தில் பாதி குறைந்து விடும்.
நீங்கள் எளிதில் பதற்றம் ஆகி விடக் கூடியவராக இருந்தால் உங்கள் எதிரிகள் அதிகமாகி விடுவார்கள்.
தேவையற்ற வார்த்தைகளை பேசினால் உங்கள் அருகில் இருப்பவர்களையே உங்களுக்கு எதிரி ஆகி விடுவார்கள்.
பதற்றம் உங்கள் இதய துடிப்பு அதிகரிக்க செய்து ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி மூளையில் நரம்புகள் பாதித்து உங்கள் இயக்கத்திற்கு தடை போட்டு விடும்.
இது பக்கவாதமாக மாறும் தன்மை கொண்டது.
பதற்றம் ஏற்படும் போது கண்களில் மூடி மூச்சை இழுத்து விடுங்கள் இவ்வாறு தொடர்ந்து சில முறை செய்தால் பதற்றம் குறையும் .
இதன் மூலம் நீங்கள் இயல்பு நிலைக்கு வரலாம்.