பெற்றோர்களிடமிருந்து மரபணு மூலமாக குழந்தைகள் பெறுபவை
ஒவ்வொரு உயிரினமும் கருவில் உருவாகும் போதே சில விஷயங்களை மரபணு மூலமாக பெறுகிறது.
உடல் உறுப்புகளின் அமைப்பு மற்றும் இயக்கங்கள் மட்டும் இல்லாமல் குணாதிசயம், மனரீதியான விஷயங்களும் இவற்றில் நடக்கும்.
அவ்வாறு ஒரு குழந்தை தனது பெற்றோரிடம் இருந்து மரபணு மூலமாக பெரும் விஷயங்கள் குறித்து சுவாரசியமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் மரபணுக்களை கொண்டுள்ளது.
தலைமுடி , தோலின் நிறம், கண், கருவிழியின் நிறம், உடலமைப்பு, உயரம், ரத்த வகை மற்றும் பரம்பரை நோய்களைப் போல ஒவ்வொருவருடைய குணாதிசயங்களும் அவரது மரபணுக்களின் மூலமே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது .
ஆகையால் உடல் மட்டும் இல்லாமல் மனரீதியான ஆரோக்கியமும், மரபணுகளுடன் தொடர்புடையது ஆகும்.
தாயிடம் இருந்து பெரும்பாலும் உடலின் வளர்ச்சி மாற்றம், நுண்ணறிவு, பார்வைத் திறன், உடல் எடை கட்டுப்பாடு, கூர்ந்து கவனிக்கும் திறன், புன்னகையின் அமைப்பு, மனநிலை மாற்றப்பழக்கம், தலைமுடி, முடியின் நிறம், முடியின் அமைப்பு, தோல் மற்றும் நரம்பியல் செயல்பாடு, தூங்கும் பழக்க வழக்கங்கள், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி போன்றவை தாயிடமிருந்து பெரும்பாலும் குழந்தை மரபணு மூலமாக பெரும் விஷயங்கள் ஆகும் .
தந்தை மூலமாக குழந்தைகள் பெறும்பவை உடல் உயரம், பற்கள், பாலினம், முகத்தில் கன்னத்தில் அமைப்பு, கண்களின் நிறம், உதடுகள், ரேகை, உடல் ரோமங்களின் வளர்ச்சி, விரல்கள், உடல் அமைப்பு மற்றும் உடலில் கொழுப்பு சேரும் தன்மை, ஆளுமை திறன், நகைச்சுவை உணர்ந்து தூங்கும் முறை போன்றவை தந்தையிடமிருந்து மரபணு மூலமாக குழந்தைகள் பெறும் விஷயங்களாகும்.
பெண் குழந்தை தனது தாய் தந்தை இருவரிடமிருந்து சம அளவு விகிதத்தில் மரபணுக்களின் பயன்களை பெறுகிறது.
ஆண் குழந்தைகள் தனது தாயிடமிருந்து 51% தந்தையிடமிருந்து 49 சதவீதமும் மரபணு பலனை பெறுகின்றனர் .
மரபணு மூலமாக வரும் நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய், மறதி நோய், தசைனார் தாேய்வு, உடல் பருமன், வளர்ச்சிதை மாற்றம், ரத்த அழுத்த நோய், டவுன் சிண்ட்ரோம், தலசீமியா, பை போலார் சிஸ்டிக், பைப்ரோஸிஸ் செல்களில் ஏற்படக்கூடிய குறைபாடு போன்றவை மரபணுக்களால் ஏற்படக்கூடிய பொதுவான நோய்களாகும்.