ராகியை மறக்காதீங்க
சிறுதானியங்களில் ராகி என்று அழைக்கப்படும் கேப்பை அல்லது கேழ்வரகு தேவ உணவாக கருதப்படுகிறது.
கேழ்வரகில் கால்சியமும், இரும்புச்சத்தும் நிறைந்துள்ளது .
சைவ உணவில் அதிகப்படியான கால்சியம் இதில் தான் உள்ளது.
பாலை விட மூன்று மடங்கு கால்சியம் கொண்டது.
கேழ்வரகில் இருக்கும் மிதியோனை எனும் அமினோ அமிலம் முதுமையை தடுக்கிறது.
இது லெசித்தினுடன் இணைந்து அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது .
அது மட்டும் இன்றி உடலில் ரிலாக்ஸ் செய்து டென்ஷன் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை போன்றவற்றுக்கு தீர்வாக அமைகிறது.
கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு கேழ்வரகு ஒரு வரப்பிரசாதமாகும் எனலாம் .
ராகி என்னும் கேழ்வரகு நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் .
இதில் பாலிஃபினாேல்ஸ் மற்றும் பைபர் அதிகம் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கேழ்வரகு தினமும் உண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற மினரல் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
இதனால் ஹீமோகுளோபின் சுரத்தல் அதிகமாகும் .
நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
ராகி எலும்புகளுக்கு உறுதியளிக்கும்.
இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் நம் உடலில் உள்ள எலும்புகளை ஸ்ட்ராங்காக வைக்கும்.
இதனால் மூட்டு வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக கேழ்வரகை எடுத்துக் கொள்ளலாம்.
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தையமின், கார்போஹைட்ரேட் என அனைத்தும் சரிவிகிதத்தில் உள்ளன.
குழந்தைகளுக்கு கேழ்வரகு போல் சத்தான, சுவையான ஊட்டச்சத்து வேற எதுவும் கிடையாது.
வளரும் குழந்தைகளைப் போலவே பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது ஊட்டச்சத்துக்களை அள்ளிக் கொடுக்கிறது.
வாரம் இரண்டு முறையாவது கேழ்வரகு பயன்படுத்துங்கள். ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.