உலகின் உயிர் பால்
ஒவ்வொரு குழந்தையும் தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் போது தாயின் ரத்தத்தின் வாயிலாகவே தனது உணவை பெற்று வளர்ச்சியடைகிறது.
பிறந்த ஒரு குழந்தைக்கு உணவு தேவை.
அதன் உடலுக்கு ஏற்ற உணவாக கொடுக்கப்பட்டால் நலம் .
அவ்வளவு சுகாதாரமானதாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியதாகவும், தேவையான ஊட்டச்சத்துக்கள் அளிப்பதாகவும் இருந்திடல் வேண்டும்.
இவை அனைத்தும் ஒருங்கிய அமைந்துள்ள ஓர் உணர்வு தான் தாய்ப்பால் .
பிறந்த குழந்தைக்கு மூன்று முதல் ஆறு மணிக்குள்ளாக பசி எடுக்கும்.
அச்சமயம் அந்த குழந்தைக்கு வெதுவெதுப்பான சுத்தமான தண்ணீர்தான்.
பின் 10 மணி நேரம் சென்ற பின் தாய்ப்பால் கொடுக்கலாம்.
தாய்ப்பாலை அருந்தும் குழந்தைகளுக்கு அஜீரணம், வாந்தி, பேதி எதுவும் வருவதில்லை.
மனோரீதியாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் தன் தாயிடம் அன்பு கொண்டவைகளாகவே இருக்கும்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்களின் உணவு பழக்கத்தை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும் .
பால் கொடுக்க ஆரம்பித்த இரண்டு நாட்களில் தாய்ப்பால் மஞ்சள் நிறமாக இருக்கும் .
இதை கொலஸ்ட்ரம் என்பார்கள்.
இப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு.
பால் கொடுக்கும் தாய்மார்கள் கவலையின்றி மகிழ்ச்சியுடன் இருப்பது முக்கியமானதாகும் .
வலப்பக்கமாகவாே அல்லது இடப்பக்கமாகவோ குழந்தையை அனணத்து படி உட்கார்ந்து குழந்தையின் மூக்கு மார்பின் மீது அழுந்தாமல் பால் தர வேண்டும்.
படுக்கையில் படுத்தபடி பால் கொடுப்பது தவிர்க்க வேண்டும்.
தாய் நோயுற்றிருக்கும் போது குழந்தைக்கு பால் தரக்கூடாது.
தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சி கொடுத்தால் தாய்ப்பால் சுரப்பு பெருகும்.
ஒரு வருடம் ஆன பிறகு பாலை நிறுத்திக் கொள்ளலாம் அல்லது அதற்கு மேல் தருவது அவர்களின் விருப்பம்.