தாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம்
வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்டினால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தை கலந்து காய்ச்சி கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும் .
வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போன்று செய்து தொடர்ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதே அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
சதகுப்பை கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
தேன், மிளகு ரசம், மணத்தக்காளி ரசம் கலந்து தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் தூய்மை அடையும்.
பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்து வந்தால் பால் அதிகமாக சுரக்கும்.
நத்தை சூரி வேரை 10 கிராம் எடுத்து பசும் பாலில் அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து வடிகட்டி இருவேளை குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும்.
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
காட்டா மணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்து கட்டிக் கொண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
தாலிக் கீரை இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து சாறு பிழிந்து அந்த சாறை குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும் .
பால் பெருகி இலையை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் .
கோவை இலையை வெள்ளை பூண்டுடன் நெய்யில் வதக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும் .
கோரை செடியின் கிழங்கை பச்சையாக எடுத்து நன்றாக அரைத்து சிறிது எடுத்து மார்பில் பற்று போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
ஒரு கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து இரண்டு முறை பாலுடன் சேர்த்து குடித்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
ஆமணக்கு இலையை நெய் தடவி நெருப்பில் வாட்டி லேசான சூட்டில் மார்பகத்தில் வைத்து கட்டிக் கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் .
பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் தொடர்ந்து பற்று போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
அரைக்கீரை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
அம்மான் பச்சரிசி இலையை அரைத்து பாலில் சேர்த்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பது.