பொது இடங்களில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு
பொது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பில் பெற்றோர் எப்போதும் அதிக அக்கறை கொள்கின்றனர் .
அதேசமயம் பொது இடங்களில் தான் குழந்தைகளுக்கான ஆபத்துகளும் அதிகம் உள்ளன.
எனவே சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றோர் கற்றுத் தருவது அவசியம்.
அந்த வகையில் பொது இடங்களில் குழந்தைகளை பாதுகாக்க வைத்திருக்க பயனுள்ள வழிகள் இதோ:
உங்கள் வீட்டு முகவரி பெற்றோரின் மொபைல் எண் ஆகியவற்றை குழந்தைகள் அறிந்திருக்க வேண்டும்.
குழந்தைகள் ஆபத்து வேலைகளில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 1098 குழந்தைகள் தொலைபேசி உதவி எண்ணை பயன்படுத்த கற்றுக் கொடுங்கள் .
நெரிசலான இடம், ஷாப்பிங் மால் அல்லது திருவிழாக்களில் குழந்தைகள் தொலைந்து விட்டால் உடனடியாக ஒரு பாதுகாப்பான இடத்தையோ அல்லது காவலர்கள் போன்ற பாதுகாப்பான நபர்களையோ அணுக கற்றுக் கொடுங்கள்.
அவர்கள் அழுத படி அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதை புரிய வையுங்கள் .
பொது இடத்தில் குழந்தைகள் தனியாக இருக்கும்போது, அணுகும் முன் பின் தெரியாதவர்களிடம் பேசக்கூடாது என கற்றுக் கொடுங்கள் .
பெற்றோர் மூலமாகத்தான் அந்நியர்களுடன் குழந்தைகள் பேச வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்துங்கள் .
அசோகரியமான செயல்களை செய்ய யாராவது கூறினால் உடனடியாக பெற்றோரிடம் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் தெரியப்படுத்தும்படி குழந்தைகளிடம் கூறுங்கள்.
எந்த சமயத்திலும் முன்பின் தெரியாதவர்களுடன் குழந்தைகள் செல்லக்கூடாது.
சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றை அளித்தாலும் சாப்பிடக்கூடாது என்பதை புரிய வையுங்கள்.
பெற்றோரிடம் எந்த விஷயத்தையும் மறைக்கக்கூடாது என்பதை சொல்லிக் கொடுங்கள்.
யாராவது இதை பெற்றோரிடம் சொல்லக்கூடாது எனக் கூறினால் குழந்தைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அது போன்ற விஷயங்களையும் பெற்றோரிடம் கூற வேண்டும் என உணர்த்துங்கள்.
சரியான தொடுதல், தவறான தொடுதல் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஏற்படுத்தி பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்திடுங்கள்.
ஆபத்து சமயங்களில் கத்தி கூச்சல் போட வேண்டும்.
மற்றவர்களை உதவிக்கு அளிக்க வேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.
எல்லா வயது குழந்தைகளும், பிள்ளைகளும் எங்கு செல்வதாக இருந்தாலும் பெற்றோரிடம் அனுமதி கேட்டு தான் செல்ல வேண்டும் என சொல்லிக் கொடுங்கள் .
குழந்தைகளை வீட்டிற்காே க பள்ளிக்கோ அழைந்து செல்லும் வகையில் ஒருபோதும் பாதுகாப்பற்ற குழு குறுக்கு வழிகளை பயன்படுத்த கற்றுக் கொடுக்காதீர்கள்.
தாமதமானாலும் வழக்கமான சாலைகளை பாதுகாப்பான வழிகளை பயன்படுத்த கற்றுக் கொடுங்கள்.
நீர் நிலைகளில் உயரமான இடங்களுக்கு அருகில் செல்லும் போது மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் .
வாகனத்தில் செல்லும்போது மற்ற சாலைகளை கடக்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .
இவைகள் எல்லாம் குழந்தைகளை பயமுறுத்த அல்ல அவர்களின் பாதுகாப்புக்கு அவசியமான முன்னெச்சரிக்கைகள் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திடுங்கள்.